மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு அருகே ஏலியன் ஸ்பேஷிப்- அதிரவைக்கும் வீடியோ!
மெக்ஸிகோ நகரத்திற்கு அருகே போபோகாட்பெட்டலின் எரிமலை வெடிப்பு இருக்கின்றது. இதன் அருகே எரிமலை வெடிப்பு குறித்து அறிந்து கொள்ள வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் யூடியூப் சேனல்களிலும்
மெக்ஸிகோ நகரத்திற்கு அருகே போபோகாட்பெட்டலின் எரிமலை வெடிப்பு இருக்கின்றது. இதன் அருகே எரிமலை வெடிப்பு குறித்து அறிந்து கொள்ள வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அங்கு சில நொடிகளில் ஏலியன் ஸ்பேஷிப் தோன்றி உடனடியாக மறைவதை நாம் யூடிப்பில் வெளியான வீடியோக்களில் காண முடிகின்றது. இந்த காட்சிகள் யூடியூப் சேனல்களிலும் வைரலாகியுள்ளது.

மேலும் எரிமலை வெடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, அதன் அருகே ஏலியன்கள் ஸ்பேஸஸ்ஷிப் சென்றுள்ளது. இதன் எதிரொலிக்கும் வெளிச்சமாக இருந்துள்ளது. இது அருகே பொருத்தியிருந்த வெப்கேமராக்கள் மூலம் எரிமலை அருகே ஏலியன்கள் உலாவியது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து யுஎப்ஓ வலைதளத்தில் விரிவாக எழுத்தப்பட்டுள்ளது.
5,426 மீட்டர் உயரமுள்ள எரிமலைகள்:
5426 மீட்டர் உயரமுள்ள எரிமலையை தொடர்ந்து கண்காணிக்கும் வெப்கேம்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிமலை வெடிப்பை கண்காணிக்கப்படுகின்றது.
இது மெக்ஸிகோ நகரத்திற்கு அருகே கேகோபகாட்பெட்டலின் அருகே அமைந்துள்ளது. இங்கு ஏலியன்கள் வந்து சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது, புதிய வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

வேற்றுகிரக ஆராச்சியாளர்கள் வீடியோ:
இதுகுறித்து வேற்றுகிரக ஆராய்ச்சியாளரான ஸ்காட்சிவாரிங் தனது வலைப்பதிவில் இடி டேட்டா பேஸில் எழுதியுள்ளார். மெக்ஸிகோவில் உள்ள ஒரு எரிமலை அருகே ஸ்பேஷிப்பில் ஏலியன்கள் செல்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதற்கு வீடியோவும் ஒன்று சான்றாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

ஏலியன்கள் ஸ்பேஷிப் தளம்:
இந்த எரிமலைக்கு 5 கி.மீ கிழே ஒரு ஏலியன் ஸ்பேஷிப் தளம் இருக்கின்றது. இதற்கு இந்த வீடியோவே 100% சான்றாக இருக்கின்றது. நான் இதை நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிமலையின் வாயிலன் அகலம் சுமார் 40 சதவீதம், வாய் 600 மீட்டர் குறுக்கே உள்ளது. இதன் 240 மீட்டர் அளவுக்கு இருக்கின்றது.

வட அமெரிக்காவின் 2வது பெரிய எரிமலை:
தலைநகர் மெக்ஸிகோ நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 5426 மீட்டர் உயரமுள்ள போபோகாட்பெட்டில், வட அமெரிக்காவின் இரண்டவாது பெரிய எரிமலை இதுவாகும். ஏலியன்கள் அங்கு வந்து சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏலியன்கள் சென்றதுக்கான ஆதாரங்கள்:
2017 ஆம் ஆண்டில், போபோகாட்பெட் 2000 க்குப் பிறகு முதல் முறையாக வெடித்தது, சாம்பல் மூன்று கிலோமீட்டர் தூரத்தை வானத்தில் செலுத்தியது. அப்போதிருந்து, பல வெடிப்புகள் ஏற்பட்டன. இருந்த போதிலும் இதுவரை யாரும் ஏலியன்கள் குறித்து கூறவில்லை. தற்போது, இந்த வெடிப்பு ஏலியன்கள் சென்றத்திற்காக ஆதாரங்கள் வலுவாக கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications