ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா.! ஜூன் 7 வரை! முந்துங்கள்.!
கொரோனா வைரஸ் பீதி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மக்களை வீட்டில் இருந்த வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது,எனவே பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால் இந்தியாவின் இணைய பயன்பாடு புதிய உச்சங்களை தொட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இந்த அட்டகாச வாய்ப்பை ஒவ்வொரு இந்திய டெலிகாம் நிறுவனமும் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது, இதன் ஒரு பகுதியாகஏர்டெல் நிறுவனம் நம்ப முடியாத ஒரு தரமான விளம்பர சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் அறிவித்துள்ள இந்த சலுகையின்கீழ் பயனர்கள் கூடுதல் செலவில்லாமல் 1000ஜிபி அளவிலான போனஸ் டேட்டாஇலவசமாக பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில்நிறுவனத்தின் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்பிற்கு பதிவு செய்யும் புதிய பயனர்களுக்கு இந்த 1000ஜிபி இலவசடேட்டா சலுகை கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்பு புதிய வாடிக்கையாளர்கள் நீண்ட கால திட்டங்களின் மீது இலவச நிறுவல் மற்றும் 15சதவிகிதம் வரை தள்ளுபடியையும் பெறலாம். ஏர்டெல் அறிவித்துள்ள இந்த அட்டகாச சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் உள்ள புதிய பயனர்களுக்கு ஆறு மாதங்களுக்கு 1000ஜிபி போனஸ் டேட்டா பெற உதவுகிறது.

தற்போது இந்த சலுகை நேரலையில் உள்ளது மற்றும் ஜூன் 7 வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த புதிய
விளம்பர சலுகையானது சென்னை, கோயம்புத்தூர், கொச்சின் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல நகரங்களில் கிடைக்கிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆறு மாதங்கள் என்கிற செல்லுபடியின் கீழ் இலவசமாக கிடைக்கும் 1000ஜிபி போனஸ் டேட்டாவனது, பேஸிக்,எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பிரீமியம் திட்டங்களில் பொருந்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பேஸிக் திட்டத்தின் விலை ரூ.799-ஆகும், இது 100எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் 150ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.அடுத்து என்டர்டெயின்மென்ட் திட்டத்தின் விலை ரூ.999-ஆக உள்ளது, இதில் 200எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் 300ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. கடைசியாக உள்ள பிரீமியம் திட்டத்தின்விலை ரூ.1,499-ஆக உள்ளது, இதில் 300எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் 500ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

ஆனால் அமேசான் பிரைம் மற்றும் ஜீ 5 க்கான அணுகல் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரீமியம் திட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு குறிப்பிட்டபடி இப்போது இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஃபைபர் பயனர்கள் இலவச நிறுவலை பெறலாம் மற்றும் நீண்ட கால திட்டங்களுக்கு 15சதவிகிதம் தள்ளுபடி பெறலாம்.

ஆறுமாத திட்டங்களுக்கு பதிவுபெறும் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டங்களில்7.50% தள்ளுபடியைப் பெறலாம், பின்பு ஆண்டு திட்டங்களுக்கு பதிவுபெறும் பயனர்கள் 15சதவிகிதம் தள்ளுபடியும் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications