Airtel Xstream இப்பொது மேலும் 50 இடங்களில்! லிஸ்டில் உங்கள் ஊர் இருக்கா பாருங்க!
டெலிகாம் ஆபரேட்டர் ஏர்டெல் தனது எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் சேவையை எதிர்வரும் வாரங்களில் மேலும் 50 நகரங்களுக்கு விரிவுபடுத்துவதாகத் தெரிவித்துள்ளது. ஏர்டெல் தனது இணையதளத்தில் 'விரைவில் அறிமுகம்' 'Launching Soon' பதிவின் கீழ் புதிய நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது.

ராம்நகர, ராமநாதபுரம், ரத்னகிரி, ருத்ரபிரயாக், சரண், சதாரா, ஷ்ராவஸ்தி, சித்தார்த்நகர், சிவகங்கா, சோலாப்பூர், சோன்பத்ரா, தெஹ்ரிஹார்வால், திருவண்ணுல், உதிபூர், உதய்பூர், உதய்பூர், உதய்புர், காவுசாம்பி, கோடகு, லாதூர், மகேந்திரகர், மஹ்ராஜ்கஞ்ச், மேவாட், மிர்சாபூர்,

முசாபர்நகர், நாந்தேடு, பர்பானி, ராய்காட், அகமதுநகர், அகோலா, அலிகார், அமராவதி, அரியலூர், பஹ்ரைச், பராபன்கிரான், சாவமான், சிக்கோடி, டேவனகேரே, மற்றும் தர்மஷாலா ஆகிய இடங்களில் அறிமுகமாகிறது.

இந்த 50 புதிய நகரங்கள் விரைவில் ஏர்டெல்லின் வேகமான பிராட்பேண்ட் சேவையுடன் வரவேற்கப்படும் என்று ஏர்டேல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடன் கூட்டுச்சேர முடிவு செய்துள்ளது, இத்துடன் வயரிங் சேவைக்கான கட்டணத்தை ரூ.1000 ஆகா நிர்ணயம் செய்துள்ளது.

டெல்லி பற்றி பேசும்போது, பிராட்பேண்ட் திட்டங்கள் ரூ. 799 முதல் ரூ. 3999 வரை துவங்குகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிராட்பேண்ட் சேவையின் ரூ. 799 திட்டம் 100 எம்.பி.பி.எஸ் வரை வேகம் கொண்ட 150 ஜிபி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் / எஸ்.டி.டி அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ சேவையை வழங்குகிறது.

இதற்கு மாறாக, 1 ஜி.பி.பி.எஸ், அமேசான் பிரைம் சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வீடியோ சேவை ஆகியவற்றுடன் வரம்பற்ற இணையத்தை மிக உயர்ந்த திட்டமான ரூ. 3999 திட்டம் வழங்குகிறது. ஏர்டெல் தரவு விலைகளை ஒரு ஜிபி-க்கு ரூ. 100 என்ற விதத்தில் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications