ஜியோவின் அதிரடியால் தவிக்கும் ஏர்டெல்: சொத்துக்கள் பறிபோகிறது.!
தற்போது அதிக வாடிக்கையாளர்களையும் ஜியோ பெற்று வருகின்றது. மேலும் 5ஜி சேவைக்காக ஜியோ அடுத்த கட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. தற்போது நிதி நெறுக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் ஏர்டெல் நிறுவனம்,
ஜியோவின் அதிரடியால் டெலிகாம் துறையில் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்டெல் நிறுவனம் சிக்கி தவித்து வருகின்றது.
தற்போது அதிக வாடிக்கையாளர்களையும் ஜியோ பெற்று வருகின்றது. மேலும் 5ஜி சேவைக்காக ஜியோ அடுத்த கட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

தற்போது நிதி நெறுக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் ஏர்டெல் நிறுவனம், 5ஜி சேவைக்காக தனது சொத்துக்களை விற்க வேண்டிய இக்கட்டான நிலைக் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம்:
ஜியோ நிறுவனம் தனது பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களால் குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை டெலிகாம் துறையில் பெற்றது.
பல்வேறு சேவைகளையும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. ஜியோவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ரயில்வேயில் நுழைந்தது:
ரயில்வேக்கு சொந்தமான ரயில்டெல்லில் சேவையை வழங்கி வந்தது ஏர்டெல். வாய்ஸ் கால் சலுகைகளை இலவசமாக வழங்குவதாக ரயில்வேயில் ஜியோ நிறுவனம் நுழைந்தது. அனுப்படும் எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணம் வசூலிப்பதாக தெரிவித்தது.
மேலும் ரயில்வே ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கி பல லட்சம் ஊழியர்களையும் ஜியோ இணைந்துக் கொண்டது.

போட்டியை சமாளிக்க முடியவில்லை:
ஜியோ நிறுவனத்தின் அதிரடியான சலுகைகளால், ஏராளமான வாடிக்கையாளர்கள் இணைந்தனர். இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கின.

ஏர்டெல் நிதி அறிக்கை:
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்த மார்ச் மாத்துடன் முடிந்த நான்காவது காலண்டில் 2022 கோடி லாபம் ஈட்டியிருப்பதாக ஏர்டெல் நிறுவனம் செபிசியிடம் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

29 சதவீதம் உயர்வு:
இது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 29 % உயர்வாக இருக்கின்றது. எனினும் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவடைவந்தால், ஏர்டெல் பங்கு விலை இரண்டை சதவீதும் குறைந்து 324 ரூபாய் 95 காசுகளாக இருந்தது.

கடும் நிதி நெருக்கடி:
ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியால் ஏர்டெல் நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது.

லட்சம் கோடி கடன் சுமை:
ஏற்கனவே ஒரு லட்சம் கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர்டெல் நிறுவனம், 5ஜி சேவையை பெற அதிக நிதி திரட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதற்காக உரிமைப் பங்குகள் வெளியிடம், சொத்துக்கள் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications