ஏர்டெல் அதிரடி : 5ஜிபி இலவச டேட்டா அறிவிப்பு..!
ஏர்டெல், ஒவ்வொரு மாதமும் 5ஜிபி வரையிலான அதிக டேட்டாவை அதன் பிராட்பேண்ட் பயனர்களுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த கூடுதல் டேட்டாவானது சந்தாதாரர்கள் அதே போல் புதிய பயனர்களுக்கும் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இது சார்ந்த விரிவான தகவல்களையம், இச்சலுகையை பெறுவதற்கான வழிமுறையையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

5ஜிபி :
"போஸ்ட்பெய்டு மொபைல் அல்லது டிஜிட்டல் டிவி (டி டிஎச்) என அணைத்து வகையான ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்பு பெறும் வீடுகள் இப்போது புதிய ஏர்டெல் சேவை இணைப்பு மூலம் 5ஜிபி வரையிலான ஒரு மாத இலவச கூடுதல் டேட்டாவை பெற முடியும்.

அறிக்கை :
ஆக ஒரு வீட்டில் ஏர்டெல் பிராட்பேண்ட் மூலம் இரண்டு ஏர்டெல் போஸ்ட்பெய்டு மொபைல்கள் மற்றும் ஒரு ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்பு இருந்தால் அவர்களால் 15 ஜிபி இலவச கூடுதல்டேட்டாவை ஒவ்வொரு மாதமும் தங்கள் பிராட்பேண்ட் கணக்கில் இணைத்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்" ஒரு ஏர்டெல் செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பயனர்கள் :
மேலும் இந்த ஏர்டெல்'இன் கூடுதல் 5ஜிபி டேட்டா சலுகையானது நிறுவனத்தின் "ஏர்டெல் சர்ப்ரைஸ்" திட்டத்தின் ஒரு பகுதி என்றும், பயனர்கள் நிறுவனத்தின் தளத்தில் இந்த வாய்ப்பை பெருவதற்கான பதிவை நிகழ்த்திக் கொள்ளலாம் என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

அணுகவும் :
இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த ஏர்டெல் வலைத்தளத்தை அணுகவும் (www.airtel.in/myhome)

நன்றி :
இந்த சலுகையானது எங்களை சேவை செய்ய வழிவகுத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு செயலாக கருதுவதாகவும் இந்திய பாரதி ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரியான (ஹோம்ஸ்) ஹேமந்த் குமார் குருசுவாமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications