தீர்ப்பை மாற்றிய டிராய்: கலக்கத்தில் ஏர்டெல், வோடபோன், ஐடியா.!
மேலும் இதை தொடர்ந்து இகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்குவழங்கி வரும் சேவைகளை நிறுத்திக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் அன்மையில் அறிவித்த ஒரு அறிவிப்பு நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுஎன்று தான் கூறவேண்டும். இந்நிலையில் டிராய் அமைப்பு சார்பாக இப்போது புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி மாதந்தோறும் குறைந்தபட்ச ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக்கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ
ஜியோ நிறுவனம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், அதே சமயம் இந்நிறுவனம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் மற்ற நிறுவனங்களின் வருமானம் சற்று குறைந்துள்ளது என்று தான்
கூறவேண்டும்.

35ரூபாய்
மேலும் இதை தொடர்ந்து ஐடியா, வோடபோன், ஏர்டெல் போன் நிறுவனங்கள் வாடிக்கையளர்கள் குறைந்தபட்சம் 35ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கம்மிங் அழைப்புகள் பெற முடியும் என அன்மையில் தெரிவித்திருந்தது.

டிராய்
இந்த அதிர்ச்சி அறிவிப்பு வாடிக்கையாளர்களிடேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது, பின்பு இது தொடர்பாக டிராய்
அமைப்புக்கு பல்வேறு புகார்கள் குவிந்தன. மேலும் இதை தொடர்ந்து இகுறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்திக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது.

3நாட்களுக்கு முன்பு
குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 3நாட்களுக்கு முன்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று டிராய் அமைப்பு அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications