ஏர்டெல் வழங்கும் ரூ.35, ரூ.65,ரூ.95 திட்டங்களில் அதிரடி சலுகை அறிவிப்பு.!
குறிப்பாக இந்த சலுகைகளை தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் இப்போது ரூ.35, ரூ.65, ரூ.95 போன்ற பிரீபெய்ட் திட்டங்களில் அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் பல்வேறு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

இந்த புதிய சலுகைளில் பயனர்கள் டாக்டைம், டேட்டா உள்ளிட்டவை ஒரே சலுகையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல் இப்போது அறிவித்துள்ள புதிய சலுகைகளைப் பார்ப்போம்.
ஏர்டெல் வழங்கும் ரூ.35 திட்டத்தில் அறிவித்த சலுகை என்னவென்றால் ரூ.26.66 டாக்டைம், உள்ளூர்,வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 100எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் ரூ.65 திட்டத்தில் ஏர்டெல் அறிவித்து சலுகை என்னவென்றால் ரூ.65 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா, 200எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் ரூ.95 திட்டத்தில் ஏர்டெல் அறிவித்து சலுகை என்னவென்றால் ரூ.95 டாக்டைம், உள்ளூர், வெளியூர், லேன்ட்லைன் அழைப்புகள் நிமிடத்திற்கு 30 பைசா, 500எம்பி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த சலுகைகளை தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது என்று ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்க முன்பு ஏர்டெல் நிறுவனம் ரூ.449 திட்டத்தை அறிமுகம் செய்தது, மேலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த திட்டம்.ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.449 திட்டம் பொறுத்தவரை தினசரி 2ஜிபி விதம் 70 நாட்களுக்க பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த திட்டத்தில் 140ஜிபி டேட்டா கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இலவச கால் அழைப்புகள், எஸ்எம்எஸ், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகயை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications