ஏர்டெல் ரூ.599 திட்டம்: ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசி-2ஜிபி டேட்டா-84நாட்கள் வேலிடிட்டி.!
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதன்படி இந்நிறுவனம் இன்று ரூ.599 திட்டத்தில் தரமான சலுகைகளை அறிவித்துள்ளது,அதைப் பற்றி பார்ப்போம் வாங்க.

லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகை
கீழடி ஆய்வில் உலகமே தமிழினத்தை திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பங்கள்.!அதாவது ஏர்டெல் ரூ.599 பீரிப்பெய்ட் திடத்தில் பயனர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள்,100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகையை வழங்குகிறது. இதனுடன் பார்தி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கு இன்சூரன்ஸ் பாலிசியும் வழங்குகிறது.

84நாட்கள் வேலிடிட்டி
மேலும் பயனர்கள் இந்த 599ரூபாய் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 84நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது, மேலும்ஒவ்வொரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்சூரன்ஸ் பாலிசி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தானாகவே ரெனிவ்ஆகும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி
தற்சமயம் இந்த திட்டம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது, மேலும் இது படிப்படியாக அடுத்த சில மாதங்களில் இந்திய நாட்டின் பிற மாநிலங்களுக்கு கிடைக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏர்டெல் 51சதவிகிதம்
குறிப்பாக இன்சூரன்ஸ் இல்லாத இந்தியர்கள், தங்கள் மொபைல் போன்களை ரீசார்ஜ் செய்யும் போது, அவர்களுக்குலைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கொடுக்கும் நோக்கத்தில இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது பார்தி ஏர்டெல் நிறுவனம்.
மேலும் இதற்குவேண்டி பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் என்கிற பெயரில் ஒரு தனி கூட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது என்றும், பின்பு பாரதி ஆக்ஸா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாரதி ஏர்டெல் 51சதவிகிதம்பங்குகளையும், பிரான்ஸ் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனமான ஆக்ஸா 49சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 முதல் 54 வயது
குறிப்பாக பார்தி ஏர்டெல் வழியாக, பாரதி ஆக்ஸ்h லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 18 முதல் 54 வயதுடையஅனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மேலும் இந்தஇன்சூரன்ஸ்-க்கு மருத்துவ பரிசோதனை கூட தேவையில்லை என்று கூறப்படுகிறது. பாலிசி சான்றிதழ் கூடடிஜிட்டல் வழியாக பயனர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் தேங்க்ஸ் செயலி
ஏர்டெல் வாடிக்கையாளர் முதலில் எஸ்எம்எஸ், ஏர்டெல் தேங்க்ஸ் செயலி அல்லது ஏர்டெல் சில்லறை விற்பனையாளர் மையம் மூலம் ரீசார்ஜ் செய்த பின் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








