Home
News

இதான் சரியான நேரம்: கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டம்!

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு ஆபரேட்டரான பாரதி ஏர்டெல் தனது 4 ஜி நெட்வொர்க்கை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. ஏர்டெல் கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, நிறுவனம் வயர்லெஸ் நிபுணர் செராகனின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரிப்பு

பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரிப்பு

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவில் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் ஏர்டெல் அதன் நெட்வொர்க் திறனை அதிகரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஏர்டெல் தனது நெட்வொர்க் திறனை அதிகரிப்பதன் மூலம், இந்தியாவில் வளர்ந்து வரும் இணைய நுகர்வுகளை பூர்த்தி செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.

கிராமப்புறங்களில் அதிக கவனம்

கிராமப்புறங்களில் அதிக கவனம்

ஏர்டெல் தனது திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்தும். எதிர்காலத்தில் 5 ஜி நெட்வொர்க்குகளுக்கு மாறவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ET டெலிகாம் அறிவிப்பின்படி, பாரதி ஏர்டெல் தனது 4 ஜி நெட்வொர்க்கை கிராமப்புறங்களில் 24 மாதங்களுக்குள் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோவை சந்திக்க ஏர்டெல் தனது வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.

செராகனின் புதுமையான சாதனங்கள்

செராகனின் புதுமையான சாதனங்கள்

செராகனின் புதுமையான சாதனங்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தி ஏர்டெல் ஒவ்வொரு வாரமும் 100 தளங்களில் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது. இது நெட்வொர்க் தளங்களை விரைவாக வரிசைப்படுத்த ஏர்டலுக்கு உதவும். செராகனின் சிறந்த சேவை வசதியானது என்றே கூறலாம். இது டைனமிக் நெட்வொர்க் பணிக்கான செலவைக் குறைக்கும் மற்றும் பாரதி ஏர்டெல் இந்தியாவில் நீண்டகால நெட்வொர்க் திறனை வளர்க்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 ஜி.பி.பி.எஸ் வரை திறன் கொண்ட செராகனின் மல்டிகோர்

1 ஜி.பி.பி.எஸ் வரை திறன் கொண்ட செராகனின் மல்டிகோர்

1 ஜி.பி.பி.எஸ் வரை திறன் கொண்ட செராகனின் மல்டிகோர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பாரதி ஏர்டெல் ஒவ்வொரு வாரமும் 100 புதிய தளங்களை வரிசைப்படுத்த உதவும். அதே நேரத்தில், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 5 ஜி நெட்வொர்க் திறனை அறிமுகப்படுத்த இது உதவும்.

பாரதி ஏர்டெல் செராகனுடன் இணைந்து செயல்படுகிறது

பாரதி ஏர்டெல் செராகனுடன் இணைந்து செயல்படுகிறது

கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக 2020 மே 3 ஆம் தேதி வரை அரசு லாக்டவுன் அறிவித்துள்ளது. நெட்வொர்க் தளங்களை வரிசைப்படுத்த பாரதி ஏர்டெல் செராகனுடன் இணைந்து செயல்படுகிறது. இரட்டை மைக்ரோவேவ் ரேடியோக்களை வரிசைப்படுத்த செராகன் பாரதி ஏர்டெலுடன் கூட்டு சேர்ந்துள்ளது. எதிர்காலத்தில் செராகனின் தீர்வுகள் மற்றும் சேவைகள் 5 ஜி நெட்வொர்க்காக விரிவாக்க பாரதி ஏர்டெல் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செராகன் தலைமை நிர்வாக அதிகாரி

செராகன் தலைமை நிர்வாக அதிகாரி

செராகனின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து கூறுகையில், செராகனின் தொழில்முறை சேவைகள், மல்டிகோர் வெளிப்புற தீர்வுகள் மற்றும் நெட்வொர்க் ரோல்-அவுட்கள் தொலைதொடர்பு ஆபரேட்டர்களுக்கு 4 ஜி நெட்வொர்க்குகளாக விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் 5 ஜி நெட்வொர்க்குகளுக்கு மாற்றவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதி ஏர்டெல் அதன் நெட்வொர்க் சிக்கல்களைத் தீர்க்க செராகன் உதவும் என தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Airtel plan to expand its 4G services in rural area!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X