ஜியோவிற்க்கு போட்டியாக ஏர்டெல் வழங்கும் புதிய சலுகை.!
ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112ஜிபி டேட்டா வழங்கப்படும், அதன்பின்பு தினசரி 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்.
ஜியோவிற்க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் இப்போது புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு ஜியோவிற்க்கு போட்டியாக ஏர்டெல் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இப்போது ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112ஜிபி டேட்டா வழங்கப்படும், அதன்பின்பு தினசரி 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா பயன்பாட்டில் எந்தவித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. இருந்தபோதிலும் 50ஜிபி டேட்டா பயன்படுத்திய பின்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள மை-இன்ஃபினிட்டி திட்டத்தின் மூலம் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்கு இந்த டேட்டா சலுகை வழங்கப்படுகிறது, மேலும் ஏர்டெல் செக்யூர் சர்வீஸ் ஆறு மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொறுத்தவரை மொபைல் போன் சேதமடைந்தால் சர்வீஸ் மையத்தின் மூலம் சரி
செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications