ஏர்டெல் : 3 மாதங்களுக்கு 30ஜிபி இலவச தரவு, இச்சலுகையை பெறுவது எப்படி.?
ஏற்கனவே கடந்த மாதம் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இதே வாய்ப்பை பெற்றிருப்போரும் இந்த வாய்ப்பை மீண்டும் பெறலாம்.!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய சலுகைகள் அறிமுகமாகி கொண்டே இருப்பதால் எதை தேர்வு செய்வது.? எந்த திட்டதை ரீசார்ஜ் செய்வது என்ற குழப்பம் நீடித்துக் கொண்டே போகிறது. ஏனெனில் காலை ஒரு ரீசார்ஜ் செய்து விட மாலையில் வேறொரு புதிய சலுகை அறிமுகமாகி விடுகிறது. இந்திய தொலைத்தொடர்பின் நிலைமையும் அப்படிதான் இருக்கிறது.!
ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஈடுகொடுத்து போட்டி போடும் ஏர்டெல் நிறுவனம் சில காலங்களுக்கு, எந்த விதமான சலுகையையும் அறிவிக்காமல் அமைதியாய் இருந்த நிலையில்கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் அதன் இரண்டாம் கட்ட போட்டிச்சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த 30ஜிபி அவவிலான இலவச டேட்டா சலுகை.!

போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு
அதாவது மொபைல் ஆப்பரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் நிறுவனம், அடுத்த மூன்று மாதங்களுக்கு அதன் இலவச அதிவேக தரவு திட்டம் ஒன்றை அதன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு
இந்த திட்டத்தை பெற ஏர்டெல் பயனர்கள் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் 'மை ஏர்டெல்' பயன்பாட்டை லாக் ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக 30 ஜிபி டேட்டா வரை பெறலாம்.

மீண்டும் பயன்படுத்தலாம்
ஏற்கனவே கடந்த மாதம் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட இதே வாய்ப்பை பெற்றிருப்போரும் இந்த வாய்ப்பை பயனப்டுத்திக்கொண்டு 10 ஜிபி இலவச தரவை (ஒரு மாதம் செல்லுபடியாகும்) பெறலாம் என்று ஏர்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

எது சிறந்தது.?
ஏர்டெல் மட்டுமின்றி ஜியோவுடன் ஐடியா, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களும் கட்டண யுத்தத்தில் ஈடுபடுகின்றன. அந்த திட்டங்களில் (ரூ.309, ரூ.509, ரூ.244, ரூ.399, ரூ.345, ரூ.352, ரூ.297, ரூ.447, ரூ.249/-) எது பெஸ்ட் என்ற ஒப்பீடு கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.!

மேலும் படிக்க
ஜியோ பயனர்களே "இந்த 7 மேட்டர்களில்" உஷாராகி கொள்ளுங்கள்.!


Click it and Unblock the Notifications