ஏர்டெல் டா.! 1000ஜிபி இலவச டேட்டா வழங்கி அதிரடி.!
புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு பார்தி ஏர்டெல் பிராட்பேண்ட் ஆபர் வழங்கப்படுகிறது.
பார்தி ஏர்டெல் தற்போது 1000 ஜிபி பிராட்பேண்ட் டேட்டாவை தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்களை வழங்குகிறது. 'போனஸ்' வாய்ப்பை தற்போது ஏர்டெல் வலைதளத்தில் பார்க்கமுடியும்.
மே 16 அல்லது அதற்கு பின்னர் பார்தி ஏர்டெல் பிராட்பேண்ட் சேவையை பதிவுசெய்த புதிய மற்றும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த ஆபரை பெற முடியும், மேலும் இது தேசிய தலைநகர் (என்சிஆர்) இல் மட்டுமே கிடைக்கும்.

ஏர்டெல் பிராட்பேண்ட் :
கடந்த வாரம், ஏர்டெல் நிறுவனம் அதன் பிராட்பேண்ட் திட்டங்களை புதுப்பித்து. புதிய திட்டங்களின் கீழ் ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்களுக்கு 100 சதவீத கூடுதல் தகவல்களை வழங்கியது .மேலும் தற்போது ரூ. 899 விலையில் 60 ஜிபி அதிவேக பிராட்பேண்ட் டேட்டாவை வழங்கி வருகிறது.

திட்டங்கள்:
ஏர்டெல் பிராட்பேண்ட் அறிவித்த மற்ற திட்டங்கள் என்னவென்றால் ரூ. 1,099 விலையில் 90 ஜிபி அதிவேக பிராட்பேண்ட் டேட்டாவை வழங்குகிறது, மேலும் ரூ. 1,299 விலையில் 125 ஜிபி அதிவேக பிராட்பேண்ட் டேட்டாவை வழங்குகிறது, அதன்பின் ரூ. 1,499 விலையில் 160 ஜிபி அதிவேக பிராட்பேண்ட் டேட்டாவை வழங்குகிறது

ஜியோ:
ஜியோ பிராட்பேண்ட் பொருத்தமாட்டில் டெல்லி, மும்பை, ஜாம்நகர், புனே மற்றும் சென்னை ஆகிய 5 பெரிய நகரங்களில் அதன் பைபர் பிராட்பேண்ட் சேவையை ஜியோ சோதனை செய்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

சிறப்புசலுகைகள் :
ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து பிராட்பேண்ட் சேவைகள் ஒரு முன்னோட்ட வழங்கலுடன் தொடங்கப்படலாம், மேலும் பல்வேறு சிறப்புசலுகைகள் அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த பைபர் திட்டம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சூழ்ச்சி :
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அனைத்து ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களையும் முழுமையாக கடைப்பிடித்து வருவதாகக் கூறியுள்ளார், மேலும் இந்த குற்றச்சாட்டுகள் நெட்வொர்க் குறைபாடுகள் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் நிலையான சூழ்ச்சி தான் காரணம். என ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பைபர்:
பைபர் பிராட்பேண்ட் சேவைகள் பொருத்தமாட்டில் 100 எம்பிபிஎஸ் வேகம் கொடுக்கும், என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் 100ஜிபி டேட்டா வழங்கும் அந்ததிட்டத்தை பின் வரும் மாதங்களில் அறிவிக்க தயாராக உள்ளது ஜியோநிறுவனம்.


Click it and Unblock the Notifications