பேங்க் அக்கவுண்ட் Airtel SIM கூட லிங்க் ஆகி இருக்கா? OTP ஏர்டெல் நம்பருக்கு வருமா? புது எச்சரிக்கை வந்ததா?
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, எந்தெந்த வாடிக்கையாளர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட் (Bank Account) உடன் தங்களுடைய ஏர்டெல் மொபைல் நம்பரை லிங்க் (Link) செய்து வைத்து உள்ளார்களோ, அவர்களுக்கான ஒரு புதிய எச்சரிக்கை அம்சத்தை (New Warning Feature) அறிமுகம் செய்துள்ளது. என்ன அம்சம்? எப்படி வேலை செய்யும்? இதனால் என்ன பயன்? இதோ விவரங்கள்:
என்ன அம்சம்? ஏர்டெல் பயனர்கள் நேரடி அழைப்புகளில் ருக்கும் போது, அவர்களுடைய மொபைல் நம்பருக்கு பேங்க் ஒடிபி ஏதேனும் வந்தால், அதை குறித்து உடனே எச்சரிக்கை செய்யம் ஒரு புதிய அம்சத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதும் கூட அவர்கள் டிஜிட்டல் மோசடியில் சிக்காமல் இருப்பதை ஏர்டெல் நிறுவனம் உறுதி செய்கிறது.

இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது? புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேங்க் ஒடிபி எச்சரிக்கை அமைப்பானது, ஒரு பயனர் அழைப்பில் இருக்கும்போது வங்கி ஒடிபி சம்பந்தப்பட்டிருக்கும் சூழ்நிலைகளை கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நிலை கண்டறியப்படும்போது, ஏர்டெல் திரையில் ஒரு நிகழ்நேர எச்சரிக்கையை தூண்டுகிறது.
இந்த எச்சரிக்கை அடிப்படையில் ஒரு நினைவூட்டலாக செயல்பட்டு, எந்தவொரு முக்கியமான தகவலையும் பகிர்வதை மறுபரிசீலனை செய்யுமாறு பயனர்களை அறிவுறுத்துகிறது சந்தேகத்திற்கிடமான நடத்தையை கண்டறிய பயனர்களை மட்டுமே சார்ந்திருப்பதற்கு பதிலாக, ஒரு முக்கியமான தருணத்தில் பயனரை எச்சரிக்கை செய்ய ஏர்டெல் நிறுவனமே ஒரு பங்கை வகிக்கிறது.
முக்கியமாக, இந்த அம்சம் அழைப்புகளை தடுப்பதோ அல்லது பயனரிடமிருந்து கட்டுப்பாட்டை பறிப்பதோ இல்லை. இது வெறுமனே ஒரு கூடுதல் விழிப்புணர்வு அடுக்கை சேர்ப்பதன் மூலம், பயனர்கள் உரையாடலில் ஈடுபட்டிருக்கும்போதே மேலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.
அவசர உணர்விற்கு அணை போட்ட ஏர்டெல்: இந்தியாவில் நிகழும் பெரும்பாலான டிஜிட்டல் மோசடி வழக்குகள் ஆனது, பயனர்கள் அந்தந்த மோசடிகளை பற்றி அறியாததால் நடப்பதில்லை. மாறாக, நேரலை உரையாடல்களின் போது மோசடிக்காரர்கள் ஒருவித அவசர உணர்வை உருவாக்குவதாலேயே அவை நிகழ்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் சில நொடிகளுக்குள் ஒடிபி-கள் அல்லது பிற ரகசிய விவரங்களை பகிருமாறு அடிக்கடி வற்புறுத்தப்படுகிறார்கள்.
இந்த துல்லியமான தருணத்தில் ஒரு எச்சரிக்கையை செய்வதன் மூலம், ஏர்டெல் அந்த அவசர உணர்வை உடைக்க முயற்சிக்கிறது; ஒரு சிறிய இடைநிறுத்தம் கூட, பயனர்கள் தங்கள் செயல்களை மறுபரிசீலனை செய்யவும், ஒரு பெரிய தவறை செய்வதை தவிர்க்கவும் போதுமானதாக இருக்கும் என்று ஏர்டெல் நம்புகிறது. இங்குதான் இந்த அம்சம் தனித்து நிற்கிறது; இது மோசடி அழைப்புகளை கண்டறிவது மட்டுமல்ல, அதிக அழுத்தமான சூழ்நிலைகளில் பயனர் பிழை செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
OPINION - ஏர்டெல் நிறுவனம் இன்னும் கூடுதலாக என்ன செய்யலாம்? ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அம்சம் ஒரு வலுவான முன்னேற்றமாக இருந்தாலும், இதன் உண்மையான செயல்திறன் - பல்வேறு பிராந்தியங்களில் உள்ள ஆங்கிலம் தெரியாத பயனர்களால் இது எந்த அளவிற்கு புரிந்துகொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்தே அமையும்.
இந்தியா ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையாகும், இங்குள்ள பயனர்கள் பல பிராந்திய மொழிகளை பேசுகிறார்கள். இந்த எச்சரிக்கைகளை ஆங்கிலத்துடன் பிராந்திய மொழிகளிலும் வழங்குவது, குறிப்பாக ஆங்கிலத்தில் முழுமையாக பரிச்சயம் இல்லாத பயனர்களிடையே, இத அம்சத்தின் தாக்கத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








