தினசரி 1.5ஜிபி டேட்டா-70நாட்களுக்கு: ஏர்டெல்லின் புதிய திட்டம் அறிமுகம்.!
ஏர்டெல் இன்று ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்தது, அதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் இப்போது போட்டிக்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு
பயன்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்பு ஏர்டெல் நிறுவனம் இணைய வேகத்தை அதிகரிப்பதில் தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டி வருகின்றது என்று தான் கூறவேண்டும். மேலும் ஏர்டெல் இப்போது அறிமுகம் செய்துள்ள சிறப்பு திட்டத்தை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் இன்று ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 70நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி 90எஸ்எமஎஸ், ரோமிங், இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. பின்பு இதற்கு முன்பு ஏர்டெல் அறிமுகம் செய்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.419 திட்டம்:
ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.419 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 1.4ஜிபி டேட்டா வீதம் 75 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் ரூ.181/-ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 42ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வீதம் 14 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.168/- ப்ரீபெயிட் திட்டம்:
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.168/- ப்ரீபெயிட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பின்பு தினசரி 100எஸ்எம்எஸ், இலவச கால் அழைப்புகள், ரோமிங் போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications