65 ரூபாய்க்கு Airtel அறிமுகம் செய்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் புதிய 4ஜி டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டேட்டா வவுச்சர் இப்போது வெறும் ரூ.65 என்ற விலைக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, டெலிகாம் நிறுவனம் ஒரு புதிய ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டம் செல்லுபடியாகும் பயனர்களுக்கானது.

சைலெண்டாக அறிமுகமான ரூ.65 Airtel திட்டம்
ஆனால் சமீபத்தில் சேர்க்கப்பட்ட ரூ.65 திட்டம், வெறும் 4ஜி டேட்டா வவுச்சர் என்பதால், வேலிடிட்டியை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது பொருந்தாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தினசரி டேட்டா பற்றாக்குறை ஏற்படும் வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த செலவில் அதிக டேட்டா எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ரூ.65 டேட்டா வவுச்சர் சிறந்த தேர்வாக அமையும்.

பெஸ்டான 4ஜி டேட்டா வவுச்சர் வேண்டுமா?
பெஸ்டான 4ஜி டேட்டா வவுச்சரைத் குறைந்த விலையில் தேடும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த ரூ. 65 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். சரி, இப்போது ஏர்டெல் வழங்கும் இந்த புதிய 4ஜி டேட்டா வவுச்சரின் பலன்களைப் பற்றி பார்ப்போம். பார்தி ஏர்டெல் வழங்கும் ரூ.65 4ஜி டேட்டா வவுச்சர் 4ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் நுகர்வோருக்கு வேறு எந்த நன்மையையும் அளிக்காது.

ரூ.65 திட்டத்தின் வேலிடிட்டி எவ்வளவு?
ஆம், இது டேட்டா ஒன்லி வவுச்சர் என்பதனால், இதில் வாய்ஸ் கால் அல்லது SMS நன்மை என்று எதுவுமே கிடையாது. இதன் செல்லுபடியாகும் காலம், உங்கள் அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மேல் ஒத்துப்போகிறது. ஆம், உங்கள் பேசிக் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி எத்தனை நாளோ அதனுடன் இந்த ரூ.65 திட்டத்தின் வேலிடிட்டி சமம் ஆகும்.

இந்த டேட்டா வவுச்சர் எப்படி உங்க பேசிக் பிளான் உடன் செயல்படும்?
அதாவது அடிப்படை ப்ரீபெய்ட் திட்டத்திற்கு இன்னும் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி இருக்கிறது என்றால், இந்த டேட்டா வவுச்சரும் 30 நாட்களுக்குச் செல்லுபடியாகும். அடிப்படை ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியானதுடன் பயன்படுத்தப்படாத அனைத்து டேட்டா நன்மைகளும் காலாவதியாகிவிடும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இனி எல்லாரும் "அந்த" திட்டத்தில இருந்து "இந்த" திட்டத்திற்கு மாறப்போறாங்க.!
ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.58 மதிப்புள்ள மற்றொரு 4ஜி டேட்டா வவுச்சரையும் வழங்கி வருகிறது. இது 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் நீண்ட காலமாக உள்ளது. எனவே நீண்ட காலமாக ரூ.58 டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி புதிய ரூ.65 திட்டம் நோக்கித் தூண்டப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், உங்களுக்கு வெறும் 7 ரூபாயில் 1ஜிபி டேட்டா கூடுதலாகக் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.19 டேட்டா வவுச்சர் பிளான் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த டேட்டா வவுச்சர்கள் எல்லாம் விலை அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால், ஏர்டெல் ரூ.19 டேட்டா வவுச்சரை பயன்படுத்தலாம். இது உங்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. ஜியோ பயனர்கள் தற்போது வாங்கக்கூடியது போன்ற 2ஜிபி டேட்டா வவுச்சரை ஏர்டெல் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின் குறைந்த விலையில் டேட்டா வாங்க விரும்புவோருக்கு ரூ.19 திட்டம் நல்ல சாய்ஸ்.

ஏர்டெல் ரீசெண்டாக அறிமுகம் செய்த ரூ 199 ப்ரீபெய்ட் திட்டம்
மிக சமீபத்தில், ஏர்டெல் நிறுவனம் புதிய ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் மொத்தம் 3ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மைகளாக Airtel Xstream Premium மற்றும் Wynk Music போன்றவை கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்களாகும். ஆம், இது 1 முழு மாதத்திற்கான செல்லுபடியுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications