4ஜி சேவையை விட 3 மடங்கு அதிக வேகம் : ஏர்டெல் நிறுவனத்தின் பலே திட்டம்.!
ஏர்டெல் கொண்டுவரும் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 4ஜி வேகத்தை விட மூன்று மடங்கு வேகம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய மாஸ்டர் ப்ளான் ஒன்றை விரைவில் அறிவிக்க தயார் நிலையில் உள்ளது, தற்போது ஜியோ நிறுவனம் அதிவேக 4ஜி வேகத்தை வழங்கிவருகிறது, டவுன்லோடு வேகத்திலும் ஜியோ மட்டுமே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜியோவுக்கு போட்டியாக 4ஜி வேகத்தை விட 5ஜி வேகத்தை கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் அறிவிக்கும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏர்டெல் நிறுவனம் மேசிவ் MIMO தொழில்நுட்பம், தற்போது உபயோகப்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் அளவில் ஐந்தில் இருந்து ஏழாக அதிகரிக்கும் திட்டத்தை கூடிய விரைவில் கொண்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி நெட்வோர்க்:
இந்தியாவில் அதிகப்படியாக 4ஜி அதிவேக இன்டர்நெட் பயன்பட்டு வருகிறது, கூடிய விரைவில் ஏர்டெல் 5ஜி நெட்வோர்க் வசதியை கொண்டுவரும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் மல்டிப்பிள்-இன்புட் மற்றும் மல்டிப்பிள்-அவுட்புட் தொழில்நுட்பத்தைப் அறிமுகப்படுத்தும்என அந்நிறுவனம் கூறியுள்ளது.

3D பீம்கள்:
மேசிவ் MIMO தொழில்நுட்பத்தில்
3D பீம்கள் இருக்கும் பகுதிகளில் சிக்னல்கள் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அதிநவீன தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட்:
அனைத்து இடங்களிலும் இன்டர்நெட் சிறப்பாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனங்களின் போதும் எவ்வித சிரமமும் இன்றி நெட்வோர்க் சிக்னல்கள் எளிமையாக கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மூன்று மடங்கு:
ஏர்டெல் கொண்டுவரும் இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 4ஜி வேகத்தை விட மூன்று மடங்கு வேகம் கிடைக்கும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பொறுத்தவரை முதலில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு முதலில்
வழங்கப்படும், அதன்பின் மற்ற நகரங்களில் இந்த திட்டம் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








