Just In
- 1 hr ago சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- 3 hrs ago நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- 3 hrs ago OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- 4 hrs ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
Don't Miss
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்த 5ஜி சேவை: நல்ல செய்தி சொன்ன Airtel.! 5G இம்மாதமே ரெடியா?
இந்தியாவின் 5G ஸ்பெக்ட்ரத்திற்கான மெகா ஏலம் நிறைவடைந்துள்ளது. நடத்தப்பட்ட இந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற முன்னணி நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. நடந்து முடிந்த 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஜியோ நிறுவனம் சுமார் ரூ.88,000 கோடிக்கு மேல் 5ஜி அலைக்கற்றைகளை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ஏர்டெல் நிறுவனம் அதிகப்படியான 5ஜி அலைக்கற்றைகளை தனக்குச் சொந்தமாக்கியுள்ளது. இப்போது, ஏர்டெல் அதன் 5ஜி சேவையை இம்மாதமே துவங்கும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த பின் வெளியான அறிவிப்புகள் என்ன?
இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் அனுமதி மற்றும் ஒதுக்கீடு விரைவில் செய்யப்படும் எனத் தொலைத்தொடர்பு அமைச்சர் உறுதி அளித்துள்ளார். ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் ஏலதாரர்களுக்கு உரிய 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை DOT ஒதுக்கீடு செய்யும் என்று அறிவித்துள்ளது.
5G குறித்து நல்ல செய்தி சொன்ன Airtel
இதற்கு மத்தியில், ஏர்டெல் நிறுவனம் எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் படி, இந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 2022 இல் 5ஜி வரிசைப்படுத்தலைத் தொடங்கும் என்று ஏர்டெல் நிறுவனம் இப்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் பொருள், ஏர்டெல் 5ஜி வெளியீட்டில் வேகமான நகர்வுகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
5G அறிமுகம் குறித்து ஏர்டெல் vs ஜியோ சொன்ன விஷயம் என்ன தெரியுமா?
ஏர்டெல், நிறுவனம் அதன் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே, ரிலையன்ஸ் ஜியோ அதன் அறிவிப்பை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவரான ஆகாஷ் அம்பானி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்தியாவில் ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையைத் துவங்கும் என்பது போன்ற தகவலைச் சூசகமாகச் சொல்லி, இந்திய மக்களின் 5ஜி எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளார்.
5ஜி சேவையைத் துவங்குவதற்கு Airtel 3 நிறுவனங்களுடன் இணைகிறதா?
இவர்களைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் இப்போது, இந்த மாதத்திலேயே 5ஜி சேவையை இந்தியாவில் துவங்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையைத் துவங்குவதற்கு 3 நிறுவனங்களுடன் இணைகிறது. இதில் சாம்சங் உடனான கூட்டாண்மை இந்த ஆண்டு முதல் தொடங்கியது. அதே வேளையில், எரிக்சன் மற்றும் நோக்கியாவுடன் இணைப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட சேவைகளுக்கான நீண்ட கால உறவை ஏர்டெல் கொண்டிருப்பதனால் 5ஜி அறிமுகத்தில் தடை இருக்காது என்று நம்பப்படுகிறது.
5ஜி ஏலத்தில் ஏர்டெல் எவ்வளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளது?
ஏர்டெல் நிறுவனம் எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் இணைந்து 5ஜி வரிசைப்படுத்தலை ஆகஸ்ட் 2022 இல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த 5ஜி ஏலத்தில், ஏர்டெல் நிறுவனம் 19867.8MHZ அலைக்கற்றையை வாங்கியுள்ளது. இதில் 900MHz, 100MHz,2000MHz இல் ஏலம் எடுத்துள்ளது. 3300MHz, மற்றும் 26GHz அலைக்கற்றையையும் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய ஏர்டெல் மும்முரம்
அதிக வேகத்துடன், லோ-லேடென்சி, பெரிய டேட்டா கையாளும் திறன் ஆகியவற்றுடன் இந்தியாவில் 5G சேவைகளை வெளியிடப் பல கூட்டாளர்கள் ஒன்று சேர்ந்து ஏர்டெல்லை செயல்படுத்துவார்கள் என்று டெலிகாம் நெட்வொர்க் கூறுகிறது. இது ஒரு சிறந்த பயனர் அனுபவத்தைச் செயல்படுத்துவதோடு, இந்தியாவின் 5ஜி வளர்ச்சிப் பாதையையும் விரைவாக முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவையைச் சந்தைப்படுத்த ஏர்டெல் நிறுவனத்திற்குச் சிரமம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
நோக்கியா மற்றும் சாம்சங் எப்படி இதில் செயல்படப் போகிறது?
இந்த பல ஆண்டு ஒப்பந்தம், Nokia தனது சந்தையில் முன்னணியில் இருக்கும் AirScale போர்ட்ஃபோலியோவில் இருந்து நெட்வொர்க் மேலாண்மை, வரிசைப்படுத்தல், திட்டமிடல் மற்றும் தேர்வுமுறை சேவைகளுக்கான தீர்வுகள் மற்றும் உபகரணங்களைச் சிறந்த இறுதி பயனர் அனுபவங்களை, சிறந்த சேவைகளுடன் வழங்கும் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங், ஏர்டெல் இன் 5ஜி நெட்வொர்க்கை தயார்நிலைக்குக் கொண்டு வர உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ கோபால் விட்டல் என்ன சொல்கிறார்?
சாம்சங் மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஏர்டெல்லுக்கு நாடு முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை விரைவுபடுத்த உதவும். ஏர்டெல் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ கோபால் விட்டல் கூறுகையில், "ஏர்டெல் ஆகஸ்ட் மாதம் 5ஜி சேவையை தொடங்கும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நெட்வொர்க் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
5G இணைப்பின் சிறந்த அனுபவத்தை உறுதி செய்கிறதா ஏர்டெல்?
5G இணைப்பின் முழுப் பலன்களையும் எங்கள் நுகர்வோருக்கு வழங்க ஏர்டெல் உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மாற்றம் தொலைத்தொடர்பு மூலம் வழிநடத்தப்படும் மற்றும் 5G தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் டிஜிட்டல் மாற்றத்தை இயக்க ஒரு புதிய மாற்றத்தை இது உருவாக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
Jio தனது 5G சேவையை August 15 ஆம் தேதி துவங்குகிறதா? 10 நாளில் இது சாத்தியமா? மிரட்டும் ஜியோ!
வோடபோன் ஐடியா மற்றும் அதானி குழுமம் எவ்வளவு ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது?
பார்தி ஏர்டெல் 19,867 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தையும், வோடபோன் ஐடியா 2,668 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையையும் வாங்கியது. நான்காவது பங்கேற்பாளரான அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் லிமிடெட் மொத்தம் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகளை மட்டுமே வாங்கியுள்ளது. அதானி குழுமம் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி மற்றும் தளவாடங்கள் போன்ற அதன் வணிக பயன்பாட்டிற்கு மட்டுமே ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தும் என்பதனால் இது போதுமானது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470