Home
News

இந்தியாவின் முதல் கிராமத்தில் நடத்தப்பட்ட 5ஜி சோதனை.. ஏர்டெல் மற்றும் எரிக்சன் கூட்டு முயற்சி என்னாது?

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பாளரான எரிக்ஸன் நிறுவனமும் சேர்ந்து செவ்வாய்க்கிழமை இந்தியாவின் முதல் 5 ஜி நெட்வொர்க் சோதனையை ஒரு கிராமப்புறத்தில் நடத்தியுள்ளது. இந்த சோதனை இந்தியாவில் எங்கு நடத்தப்பட்டது? எதற்காக நடத்தப்பட்டது? இந்த சோதனையின் முடிவுகள் இந்தியாவில் 5ஜி தொடங்க ஆதரவாக இருக்கிறதா என்பது போன்ற முக்கியமான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவின் எந்த கிராமத்தில் ஏர்டெல் முதல் 5ஜி சோதனையை நடத்தியது தெரியுமா?

இந்தியாவின் எந்த கிராமத்தில் ஏர்டெல் முதல் 5ஜி சோதனையை நடத்தியது தெரியுமா?

டெல்லி என்சிஆரின் புறநகர்ப் பகுதியான பைபூர் பிராமணன் கிராமத்தில் தான் இந்த 5ஜி சோதனை ஏர்டெல் மூலம் நடத்தப்பட்டுள்ளது. டெலிகாம் துறையால் ஏர்டெல்லுக்கு ஒதுக்கப்பட்ட 5 ஜி ஸ்பெக்ட்ர சிக்னலை பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேம்பட்ட மொபைல் பிராட்பேண்ட் (eMBB) மற்றும் நிலையான வயர்லெஸ் அணுகல் (FWA) சேவைகள் போன்ற தீர்வுகள் மூலம் அதிவேக பிராட்பேண்டிற்கான அணுகலைச் செயல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பிளவை இணைப்பதற்கு இந்த 5G சோதனை மிகப்பெரிய ஆற்றலைக் காட்டியுள்ளது.

5ஜி என்பது என்ன? அது எப்படி இந்தியாவின் நிலையை மாற்றி அமைக்கும்?

5ஜி என்பது என்ன? அது எப்படி இந்தியாவின் நிலையை மாற்றி அமைக்கும்?

எளிமையாகச் சொன்னால், 5 ஜி என்பது அடுத்த தலைமுறை நெட்வொர்க் தொழில்நுட்பமாகும். இது இயந்திரங்கள், பொருள்கள் மற்றும் பிற ஹைடெக் சாதனங்கள் உட்பட அனைவரையும் ஒன்றாக அதிவேக நெட்வொர்க் உடன் வேகமாக குறைந்த தாமதத்துடன் இணைக்க உதவும் ஒரு அதிவேக நெட்வொர்க் சேவையாகும். உலக நாடுகள் பல இப்போது 5ஜி சேவையை பயன்படுத்தத் துவக்கிவிட்ட நிலையில் இந்தியா இன்னும் அதன் சோதனையைப் பல இடங்களில் நடத்தி வருகிறது.

ஏர்டெல் CTO ரந்தீப் சிங் செக்கோன் இந்த சோதனை பற்றி என்ன கூறுகிறார்?

ஏர்டெல் CTO ரந்தீப் சிங் செக்கோன் இந்த சோதனை பற்றி என்ன கூறுகிறார்?

இதேபோல், ஜியோ நிறுவனம் கூட 5ஜி சேவைக்கான அதன் சோதனையைச் சமீபத்தில் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. FWA போன்ற உபயோக வழக்குகளின் மூலம் கடைசி மைலுக்கு பிராட்பேண்ட் கவரேஜ் வழங்கும்போதும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் போதும் இந்தியாவில் 5G ஒரு உருமாறும் தொழில்நுட்பமாக இருக்கும்" என்று ஏர்டெல் CTO ரந்தீப் சிங் செக்கோன் கூறியுள்ளார்.

எரிக்சன் நிறுவனத்தின் தலைவாரி 5ஜி சோதனை குறித்து கூறியது என்ன?

எரிக்சன் நிறுவனத்தின் தலைவாரி 5ஜி சோதனை குறித்து கூறியது என்ன?

அதேபோல், எரிக்சன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, ஓசியானியா மற்றும் இந்தியாவின் தலைவரான நுன்சியோ மிர்டில்லோ கூறுகையில், "இந்த 5G தொழில்நுட்பம் நாட்டின் சமூக-பொருளாதார பெருக்கமாக" செயல்படும் என்று கூறியுள்ளார். எரிக்சனின் ஆய்வின்படி, மொபைல் பிராட்பேண்ட் தத்தெடுப்பு விகிதத்தில் சராசரியாக 10 சதவிகிதம் அதிகரிப்பு ஜிடிபியில் 0.8 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று மிர்டில்லோ குறிப்பிட்டிருக்கிறார்.

1 ஜிபிபிஎஸ் -க்கும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்த ஏர்டெல் செய்த வேலை

1 ஜிபிபிஎஸ் -க்கும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்த ஏர்டெல் செய்த வேலை

கடந்த சில மாதங்களாக, ஏர்டெல்லின் 3,500 மெகா ஹெர்ட்ஸ் சோதனை ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி குருகிராமில் சைபர் ஹப்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி 5 ஜி நெட்வொர்க்கில் 1 ஜிபிபிஎஸ் -க்கும் அதிகமான வேகத்தை வெளிப்படுத்த பாரதி ஏர்டெல் மற்றும் எரிக்சன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரியில், இரு நிறுவனங்களும் ஐதராபாத்தில் வணிகரீதியாக நிறுவப்பட்ட 1800 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் சோதனையை எரிக்சன் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Along With Ericsson Conducts Indias First Rural 5G Trial In Outskirts Of Delhi NCR : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X