ஒருமாத கால ஏர்டெல் டூ ஏர்டெல் வரம்பற்ற உள்ளூர் அழைப்புகளை பெறுவது எப்படி.?
பார்தி ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.148/- என்ற விலைக்கு 1 மாத கால வரம்பற்ற உள்ளூர் குரல் அழைப்புகளை வழங்குகிறது. அதை பெறுவது எப்படி.?
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஆர்காம் ஆகிய நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் ஒரு முயற்சியாகவே ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அதிரடியான திட்டம் தோன்றுகிறது. சமீபத்தில்ஏர்டெல் ரூ.148/-க்கு ஒரு மாத காலம் செல்லுபடியாகும் வரம்பற்ற ஏர்டெல்- டூ-ஏர்டெல் உள்ளூர் அழைப்புகளை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
உடன் ரிலையன்ஸ் ஜியோவுடனான போட்டி முனைப்பில் ஏர்டெல் கொண்டு வரும் முதல் திட்டமொன்றும் இதுவல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் "வெல்கம் ஆஃபர்" அறிமுகமான நாளில் இருந்=ஏ ஏர்டெல் அதன் அதிரடி சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அந்த வரிசையில் ஒன்று தான் இந்த புதிய சலுகை, இதை பெறுவது எப்படி..? என்பதை பற்றிய தொகுப்பே இது.

ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
ஏர்டெல் வழங்கும் இந்த புதிய திட்டம் பார்தி ஏர்டெல் ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இதை முயற்சிக்க வேண்டாம்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

*121*1 # யுஎஸ்எஸ்டி எண்
இப்போது, நீங்கள் உங்கள் ஏர்டெல் எண்ணில் இருந்து *121*1 # (ஒரு யுஎஸ்எஸ்டி எண்) என்ற எண்ணை டயல் செய்யவும். டயல் செய்ததும் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் திரையில் ஒரு சேவை செய்தியை காண்பீர்கள்.

சேவையை பெற உறுதி
அடுத்ததாக '1' என்ற எண்ணை அழுத்தி சேவை செய்திக்கு பதிலளிக்க வேண்டும் பின்னர் மீண்டும் '1' என்ற எண்ணை அழுத்தி சேவையை பெற உறுதி செய்யவும் .

உடனடியாக செயல்படுத்தப்படும்
மேலே கூறிய அனைத்தையும் நீங்கள் சரியாக செய்திருந்தால் ரூ.148/- ஆனது உங்கள் பேலன்ஸில் இருந்து கழிக்கப்படும் மற்றும் சலுகை உடனடியாக செயல்படுத்தப்படும்.

கட்டாயம்
இந்த சலுகையை பெற உங்கள் மெயின் பேலன்ஸில் இருந்து நீங்கள் ரூ.148/- செலுத்த வேண்டியது இருக்கும். எனவே, அதை நீங்கள் அந்த அளவிலான பேலன்ஸை பராமரிக்க வேண்டியது கட்டாயமாகும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications