ஏர்செல் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்சுடன் இணைந்து சிறப்பு சலுகைகளை அறிவித்தது!

By Jeevan
|

இந்தியாவில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஏர்செல், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்சுடன் இணைந்து பல சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏர்செல் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்சுடன் இணைந்து சிறப்பு சலுகைகளை அறி

ஐபிஎல் 2013க்கான போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள இந்நிலையில் இதை அறிவித்துள்ளது ஏர்செல்! இந்த திட்டத்திற்கு 'காவ்ன் தேகா மேன் ஆப் த மேட்ச்' என பெயரிட்டுள்ளது. இதில் பங்கேற்று வெற்றிபெறும் முதல் 3பேர், மேன் ஆப் த மேட்ச் பட்டத்தை உரிய ஆட்டக்காரருக்கு தரும் அறிய வாய்ப்பை ஏர்செல் வழங்குகிறது.

இதில் பங்கேற்பதற்கு நீங்கள் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளராக இருந்தால் ரூ.100 அல்லது அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்யவேண்டியது அவசியம். இதில் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு வாடிக்கையாளர்களும் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளது ஏர்செல்!

மேலும் சில வெற்றியாளர்களுக்கு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் தருகிறது ஏர்செல்! மேலும் ரெய்னா, அஸ்வின் ஆகியோருடன் சாட் செய்யும் வாய்ப்பையும் தருவதாக ஏர்செல் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X