ரூ.30க்கு முழு டாக்டைமை வழங்கும் ஏர்செல்

By Karthikeyan
|
ரூ.30க்கு முழு டாக்டைமை வழங்கும் ஏர்செல்

ஏர்செல் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தொலைத் தொடர்பு சேவையை செய்து வருகிறது. ஏர்செல்லுக்கும் மிகக் கணிசமான அளவில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தற்போது தனது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய முழு டாக்டைம் கட்டண முறையை அறிமுகம் செய்திருக்கிறது ஏர்செல். அதாவது ரூ.30க்கு ரிசார்ஜ் செய்தாலே இந்த முழு டாக்டைம் வசதியை இனி ஏர்செல்லில் அனுபவிக்கலாம். ஆனால் இந்த கட்டண விகிதம் இந்தியாவில் உள்ள இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

ஏர்செல்லின் இந்த முழு டாக்டைம் வசதியை அனுபவிக்க வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ரூ.100க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும். அதுபோல் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரூ.75க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும். அஸ்ஸாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் உள்ளவர்கள் ரூ.62க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும்.

டெல்லி, இமாசல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.50க்கு ரிசார்ஜ் செய்ய வேண்டும். மேற்சொன்ன பகுதிகளைத் தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் ரூ.30க்கு ரிசார்ஜ் செய்தாலே போதும் அவர்கள் ஏர்செல்லின் முழு டாக்டைம் வசதியை அனுபவி்க்கலாம்.

ஆனால் தமிழ்நாட்டின் மீது ஏர்செல்லுக்கு ஏன் இந்த கொலைவெறி என்று தெரியவில்லை. ஏனெனில் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் ரூ.100க்கு ரிசார்ஜ் செய்தால் மட்டுமே ஏர்செல்லின் முழு டாக்டைமை அனுபவி்க்க முடியும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X