Home
News

குட்டி அம்பானிக்கு பெரிய பொறுப்பு.. அடுத்த 5 ஆண்டுக்குள் அப்பா பெயரை காப்பாற்றுவாரா? Jio IPO ஆட்டம் ஆரம்பம்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்திடம் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஓ (IPO) என்கிற இனிஷியல் பப்ளிக் ஆபருக்கு (Initial Public Offer) முன்னதாக, ஆகாஷ் அம்பானி (Akash Ambani) அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (Managing Director) ஆக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆகாஷ் அம்பானி ஏற்கனவே ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்ட தகவல் மே 7, 2026 அன்று பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இது இன்னுமும் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குட்டி அம்பானிக்கு பெரிய பொறுப்பு.. Jio IPO ஆட்டம் ஆரம்பம்!

இந்த முடிவு மே 9, 2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் அம்பானி மிக நீண்ட காலமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். ஆகாஷ் அக்டோபர் 2014 இல் ஒரு செயல்சாரா இயக்குநராக (Non-executive director) சேர்ந்தார்.

பின்னர், அவர் ஜூன் 2022 இல் செயல் தலைவராக (Executive chairman) நியமிக்கப்பட்டார் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறார். ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி (Jio 5G) விரிவாக்கத்தையும், ஜியோ பிரைன் (Jio Brain) போன்ற புதுமையான சேவைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI - Artificial intelligence) துறையில் அந்நிறுவனம் நுழைவதையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

ரிலையன்ஸ் ஜியோ ஐபிஓ அளவு (Reliance Jio IPO Size): ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓ, நாட்டிலேயே மிகப்பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைகளின் வரலாற்றில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மிகப்பெரிய ஐபிஓ ஹூண்டாய் மோட்டார் - இந்தியாவினுடையது, அது அக்டோபர் 2024-ல் 3.3 பில்லியன் டாலர்களை திரட்டியது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஐபிஓ இதைவிடவும் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ பட்டியலிடப்பட்ட உடனேயே, நாட்டின் பங்குச் சந்தைகளில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக மாறும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ-வுக்கு செல்வதாலும், முதன்மை நிதியை திரட்டுவதற்காக புதிய பங்குகளை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாலும், இது இந்திய பங்குச் சந்தைக்கு ஒரு சுவாரஸ்யமான தருணமாக அமையும்.

மேலும், புவிசார் அரசியல் பதட்டங்கள் சந்தையை பாதித்துள்ள, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாக உயர்ந்து வரும் ஒரு காலகட்டத்தில் இது பட்டியலிடப்படுகிறது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஐபிஓ உலகளாவிய சந்தைகளால் பாதிக்கப்படக்கூடும், அதனால்தான், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த ஐபிஓ-வுக்கு விற்பனைக்கான சலுகை (OFS) வழியை நாடவில்லை.

ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் விளையாட்டு பிரிவையும் நிர்வகிக்கிறார். இந்த பிரிவு, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்ற முதன்மை போட்டிகளிலும், சர்வதேச அளவிலான பல போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளை சொந்தமாக கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜியோ தொடர்பான மற்ற முக்கிய அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம், சில தினங்களுக்கு முன்னர் , ரூ.199 க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இது அறிமுகமான வேகத்தில், தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்கி வந்த ஒரே ஒரு திட்டமும் அமைதியான முறையில் நீக்கபட்டது.

ஜியோ நிறுவனம் தனது ஆப்-ஒன்லி ரீசார்ஜ் ஆன ரூ.209 ப்ரீபெய்ட் பிளானை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஜியோ நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும், மைஜியோ (MyJio) ஆப்பின் 'மலிவு விலை பேக்குகள்' (Affordable Packs) பிரிவில் உள்ள 'மதிப்பு திட்டங்கள்' (Value Plans) என்ற வகையின் கீழ் முன்பு கிடைத்த ரூ.209 திட்டமானது, இப்போது காணப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Ahead Jio IPO Jio Platforms appointed Akash Ambani as its managing director for 5 years
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X