விஷப் பாம்புடன் செல்பீ : மறுபடியும் 'அதே' பயங்கரம்..!
சில நாட்களுக்கு முன்பு சாண்டியாகோவை சேர்ந்த டோட் பாஸ்லர் என்பவர் விஷப் பாம்பான 'ராட்டில் ஸ்னேக்' ஒன்றின் அருகில் செல்பீ எடுக்க முயற்சி செய்த போது, பாம்பு அவரை கடித்து, பின் அவர் மருத்துவமனையில் உயிர் பிழைத்து, ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரத்தி நூற்றி அறுபதியோரு டாலர் ஆஸ்பத்திரி பில் கட்டிய கதை நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
செல்பீ எடுத்தால் என்ன ஆகும்..? 153,161 டாலர் செலவாகும்..!

அந்த கதையில் வரும் இரண்டாம் பாகம் தான் இந்த கதை. அதே கதை தான், ஆனால் கடி வாங்கியவரும், கடித்த பாம்பும் மட்டும் வேறு..!

கடந்த திங்கள் அன்று, வீட்டின் அருகே உலாவிக் கொண்டிருந்த 4 அடி நீள விஷப்பாம்புடன் செல்பீ ஒன்று எடுக்க முயற்சிதுள்ளார் 36 வயதான அலெக்ஸ் கோமஸ், அப்போது பாம்பு அவர் கையில் கடித்துள்ளது. பயங்கரமான விஷப் பாம்புகடி வாங்கிய அலெக்ஸ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவர் தன் கையை இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..!
கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

புகைப்படங்கள் : KCAL 9
ஒரு செல்பீ மற்றும் அதனால் கிடைக்கும் 1000 லைக்ஸ், உயிருக்கு ஒப்பாகாது. இரண்டாவது முறையாக நடந்துள்ள இந்த சம்பவம் இறுதியானதாக இருக்கட்டும்..!


Click it and Unblock the Notifications