ஏரோவாய்ஸ்: இலவச சிம் கார்ட் உடன் வரம்பற்ற டேட்டா & வாய்ஸ் அறிவிப்பு.!

ஏரோவாய்ஸ் நிறுவனம் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் வரம்பற்ற இலவச குரல் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா வழங்குகிறது.

|

மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO-mobile virtual network operator) நிறுவனமான ஏரோவாய்ஸ், இறுதியாக பொது மக்களுக்கு அதன் இலவச சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏரோவாய்ஸ் நிறுவனமானது சமீபத்தில் பிஎஸ்என்எல் மூலம் இயக்கப்படும் இந்தியாவின் முதல் எம்விஎன்ஓ (MVNO) சாப்ட் சேவையை அறிவித்தது.

ஏரோவாய்ஸ்: இலவச சிம் கார்ட் உடன் வரம்பற்ற டேட்டா & வாய்ஸ் அறிவிப்பு.!

மூலம்: டெலிகாம்.இன்ஃபோ

கடந்த வாரம் நிகழ்ந்த நிகழ்வொன்றில், ஏரோவாய்ஸ் நிறுவனம் தனது சாப்ட் சேவையையும், பிஎஸ்என்எல் உடனான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முடிந்ததையும் உறுதி செய்தது. அதனை தொடர்ந்து முதற்கட்டமாக, ஏரோவாய்ஸ் பாண்டிச்சேரி உட்பட தமிழ்நாடு / சென்னையில் அதன் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர்

மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர்

இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 17, 2017 முதல், அதன் மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO) சேவைகளை வழங்கத் தொடங்கியது. ஏரோவாய்ஸ் அதன் தேசிய சிம் கார்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

இலவச சிம் கார்டு

இலவச சிம் கார்டு

ஏரோவாய்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை நெட்வொர்க் மூலம் ஏரோவாய்ஸ்-ன் குறிப்பிட்ட அளவிலான இலவச சிம் கார்டுகள் சந்தையில் விநியோகிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஆம், முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ போன்றே இலவச சிம் அட்டைகளை வழங்கி வருகிறது)

வரம்பற்ற இலவச குரல் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா

வரம்பற்ற இலவச குரல் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா

இந்த சேவை தொடக்கத்தின் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், ஏரோவாய்ஸ் நிறுவனம் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் வரம்பற்ற இலவச குரல், எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற இலவச டேட்டா வழங்குகிறது. இந்த இலவச சேவையானது, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பங்குதாரரான பிஎஸ்என்எல் நிபந்தனைகளுக்கு உட்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் உடன் இணைந்து அட்பே

பிஎஸ்என்எல் உடன் இணைந்து அட்பே

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் முதன்மை மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டராகும் முனைப்பில், கடந்த ஜூன் 2017-ல் மாநில அரசு நடத்தும் நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து அட்பே (AdPay) நிறுவனம் இந்தியாவின் முதல் தேசிய மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆன ஏரோவாய்ஸ்-ஐ அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவை

பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவை

கூறப்படும் மொபைல் மெய்நிகர் வலைப்பின்னல் ஆப்ரேட்டர் (MVNO) ஆனது அதன் குரல் மற்றும் தரவு சேவைகளை மட்டுமின்றி, பைபர் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதோடு சேர்த்து சர்வதேச டிராவலர் சிம் கார்டுகள், இன்டர்நெட் ஆப் திங்ஸ் (ஐஓடி) சிம் கார்டுகளையும் வழங்குகிறது.

டிராய்

டிராய்

சாப்ட் லான்ச் அறிமுக நிகழ்வில் ஏரோவாய்ஸ் (AEROVOYCE) நிறுவனம், இந்திய அரசாங்கத்திற்கும், இந்தியாவின்தொலைத் தொடர்புத் துறைக்கும் மற்றும் கட்டுப்பாட்டாளரான டிராய்-க்கும் நன்றியை தெரிவித்தது. உடன் குறிப்பிட்ட நேரத்தில் இத்தகைய சாதனையை அடைய உதவிய அதன் குழு உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டது.

Best Mobiles in India

English summary
AEROVOYCE (MVNO) Started Offering Free SIM Cards, Unlimited Voice Calls, SMS, and Data as Part of Soft Launch. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X