வீட்டில் AC இருக்கா? அப்போ இந்த பிரச்னைகள் வரலாம்.. கட்டாயம் இந்த 5 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க..
கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. அதுவும் வீடுகளில் ஃபேன், ஏசி மற்றும் கூலர்களின் பயன்பாடு வழக்கத்தை விடப் பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க ஏசி முக்கிய சாதனமாக மாறியுள்ள நிலையில், அதனை சரியாக பராமரிக்காவிட்டால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஏசி வெடிப்பு சம்பங்களுக்கு மின்சார கோளாறுகள், குளிரூட்டும் வாயு கசிவுகள் மற்றும் இயந்திரத்தில் ஏற்படும் அழுத்தம் போன்றவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏசி பயன்படுத்தும் மக்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

1.ஏர் ஃபில்டர்ஸ்: உங்கள் ஏசியில் உள்ள ஏர் ஃபில்டரில் (AC air filters) அதிகமான தூசி படிந்திருக்கிறதா என்பதை ஒவ்வொரு 15 முதல் 20 நாட்களுக்குள் ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் ஏசி ஏர் ஃபில்டரில் தூசி படிந்து அடைப்புகள் ஏற்பட்டால், அது ஏசியின் குளிர்ச்சியான காற்றை முழுமையான வெளியிட ஒரு தடையாக அமைந்துவிடும். இதனால், சிறப்பான குளிர்ந்த அனுபவத்தை நீங்கள் இழப்பதோடு, உங்கள் மின்சார கட்டணம் அதிகமாக அதிக வாய்ப்பிருக்கிறது.
2.அவுட்டோர் யூனிட்: உங்களது வீட்டிற்குள் இருக்கும் ஏசி சுத்தமாக இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு வெளியில் இருக்கும் அவுட்டோர் யூனிட் (AC outdoor unit) மீது எப்போதும் ஒரு கவனம் இருக்க வேண்டும். காரணம், இதில் தான் அதிகமான தூசி, மண், இலைகள், பறவையின் சிறகுகள் என்று பலவிதமான குப்பைகள் தேங்கக்கூடும் என்பதனால், இவற்றை கவனிப்பது மிகவும் அவசியம் ஆகும்.
அதுவும் அவுட்டோர் யூனிட்டை சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வையுங்கள். மேலும் காற்றோட்டம் சென்று வர போதிய இடைவெளி இருக்கிறதா என்பதையும் செக் செய்யுங்கள். சுத்தமான அவுட்டோர் யூனிட் சிறப்பான ஹீட் எக்ஸ்சேஞ் (heat exchange) உடன் வேகமாக குளிர்ந்த (fast cooling experience) அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3.ஏசி சர்வீஸ்: உங்கள் ஏசியை பல வருடங்களுக்கு பயன்படுத்த நினைத்தால், கட்டாயம் 1 வருடத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் ஏசியை நீங்கள் சர்வீஸ் (AC service) செய்ய வேண்டும். சான்றளிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் (certified AC service centre) மூலம் ஏசியை சர்வீஸ் செய்வது சிறப்பானது. குறிப்பாக, கோடைக்காலம் துவக்கத்திற்கு முன்பாக ஒருமுறையும், கோடைக்காலம் நிறைவடையும் பொழுது ஒருமுறையும் சர்வீஸ் செய்வது மிகவும் நல்லது.
பல இடங்களில் ரூ.399 முதல் துவங்கி ரூ.999 வரை ஏசி சர்வீஸ் (AC service costs) செய்து தரப்படுகிறது. இதை அதிக செலவாகக் கருத வேண்டாம். குறிப்பாக, ரெஃப்ரிஜெரண்ட் லெவல் (refrigerant level), இன்டெர்னல் கசிவுகள் (internal leaks) மற்றும் மின்சார கோளாறுகள் (electrical issues) ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை சர்வீஸ் மூலம் தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் ஏசி தீ விபத்துகளைத் தவிர்த்து (avoid AC fire accidents) பாதுகாப்பாக இருக்க முடியும்.

4. ஏசி டெம்ப்ரேச்சர்: நமது நாட்டின் வெப்பநிலைக்கு, உங்கள் ஏசியை 24°C முதல் 26°C வெப்பத்திற்குள் (Ideal AC temperature) பயன்படுத்துவது சிறப்பானது. அதேபோல், ஏசியில் உள்ள டைமர் மோட் (AC timer mode) அம்சத்தை பயன்படுத்துவதும் முக்கியமானது. இது உங்கள் ஏசியை நள்ளிரவில் ஓவர் கூலிங் ஆகாமல் பார்த்துக்கொள்கிறது. அதேபோல், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏசி தானாக OFF செய்யப்படுவதினால், மின்சார கட்டணத்திலும் ஒரு கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.
5. ஏசியில் சத்தம் வருகிறதா? பொதுவாக ஏசியில் இருந்து வரும் மோசமான நாற்றம் (bad odours) பூஞ்சை வளர்ச்சியின் (fungal infection growth) காரணமாக இருக்கலாம். அதேபோல் ஏசியில் இருந்து வரும் சிறிய சத்தம் அல்லது இரைச்சல்கள் (AC noise) கட்டாயம் ஏசியின் உள்ள பாகத்தின் கோளாறை குறிப்பதாக இருக்கலாம். ஆகையால் இவற்றை உடனே கண்டறிந்து சரி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கும், உங்கள் ஏசியின் ஆயுளுக்கும் நல்லது.


Click it and Unblock the Notifications