PM Modi சொன்னது இதுக்கு தானா: 3 பேரை தனியா தூக்கிய ஆரோக்கிய சேது ஆப்- எப்படி தெரியுமா?
மூன்று கொரோனா சந்தேக நபர்கள் ஆரோக்யா பயன்பாட்டின் மூலம் தங்களை அரசாங்கத்திடம் தெரிவித்தனர், அவற்றின் மாதிரிகள் இப்போது சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்தும் மற்றொரு முயற்சியாக ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆரோக்கிய சேது என்ற ஆப் அறிமுகம்
இதையடுத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக ஆரோக்கிய சேது என்ற ஆப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டது. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது
அரசு அறிமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலி அரசு அறமுகப்படுத்திய ஆரோக்கிய சேது என்ற செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் தங்கள் இருப்பிடம்( ஜிபிஎஸ்) மற்றும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்கள் நமது அருகில் யாரேனும் உள்ளார்களா என்பதை காட்டும்.

அதிக ஆபத்து என எச்சரிக்கும்
இந்த செயலியின் பிரத்யேகம் என்னவென்றால் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து 6 தூரத்தில் நாம் இருந்தோம் என்றால் அது அதிக ஆபத்து என எச்சரிக்கும், இதையடுத்து உரிய எண்ணுக்கோ அல்லது 1075 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்து உதவியை பெற வேண்டும்.

கொரோனா தொற்று இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளதா
அதேபோல் இந்த செயலியில் கொரோனா ஆப் தற்காப்பு முறை குறித்த விழிப்புணர்வு, மேலும் நமக்கு கொரோனா தொற்றோ அல்லது கொரோனா தொற்று உள்ளவர்களிடம் தொடர்பு இருந்தாலோ உடனடியாக அவர்களது தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்கள் வெளிநபர்களுக்கு பகிரப்படாது என உறுதியாக தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார்
இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்தார். பிரதமர் கூறும்போது, ‘‘உங்கள் பகுதியில் யாராவது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் செயலி அடையாளம் காட்டும். பல்வேறு மாநிலங்களின் உதவி எண்களும் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார். இந்த செயலியை இரண்டு வாரங்களில் மட்டும் 1 கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர்.

சுய மதிப்பீட்டிற்கான கேள்வித்தாள்
இந்த நிலையில் மூன்று நபர்கள், ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து சுய மதிப்பீட்டிற்கான கேள்வித்தாளை நிரப்பினார்கள். இது பயனர்களுக்கு தொற்றுநோய் குறித்த அபாய அளவை எட்டியது. அவர்களின் ஆபத்து நிலை அதிகமாக இருந்ததால் ஹெல்ப் லைன் தொடர்பு எண்ணோ, சுகாதார அமைச்சகத்துக்கான எண்ணோ தொடர்பு கொள்ளும்படி காண்பித்தது.

பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்
மேலும் அதுகுறித்து அந்த மாநில அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடமிருந்து மூன்று நபர்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்களைப் பெற்ற பிறகு, சோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளை சேகரிக்க ஊழியர்களை அனுப்பினோம் என தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நரேந்திர அகர்வால் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு பெரிதும் உதவும்
ஆரோக்யா பயன்பாட்டை மக்கள் பதிவிறக்கம் செய்தால், இது அரசாங்கத்திற்கு பெரிதும் உதவும், ஏனெனில் இந்த சூழ்நிலைகளில் நிகழ்ந்ததைப் போல, நிலைமையின் தீவிரத்தை அவர்கள் உணர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்களது நிலை குறித்து தெரிவிக்க முடியும்.


Click it and Unblock the Notifications








