Home
News

நவம்பர் 1 முதல் அமல்.. ஆதார் கார்டு புதிய விதிகள்.. 3 முக்கிய மாற்றங்கள் வருகிறது!

ஆதார் அட்டை தொடர்பான 3 முக்கிய மாற்றங்கள் வருகிற 2025 நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் - ஆதார் அப்டேட் (Aadhaar Update), பான் இணைப்பு (PAN Link) மற்றும் கேஒய்சி செயல்முறை (KYC Process) ஆகியவைகளுடன் தொடர்புடையது.

முதல் மாற்றம் - ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வது: முன்பு, எந்தவொரு திருத்தம் அல்லது புதுப்பிப்புக்கும் நீங்கள் ஆதார் சேவா கேந்திராவிற்கு (Aadhaar Seva Kendra) செல்ல வேண்டி இருந்தது. இப்போது, ​​முழு செயல்முறையையும் ஆன்லைன் வழியாகவே செய்யலாம்.

நவம்பர் 1 முதல் அமல்.. ஆதார் கார்டு புதிய விதிகள்!

பெயர் அல்லது முகவரி உட்பட, நீங்கள் சமர்ப்பிக்கும் விவரங்கள், உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ரேஷன் கார்டு போன்ற அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களுடன் தானாகவே சரிபார்க்கப்படும். இது விரைவான மற்றும் பாதுகாப்பான புதுப்பிப்பு செயல்முறையை உறுதி செய்கிறது.

புதுப்பிக்கப்பட்ட ஆதார் கட்டணங்களும் (Updated Aadhaar Fee Structure) இங்கே குறிப்பிடத்தக்கது:
- 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச பயோமெட்ரிக் புதுப்பிப்புகள்
- பெயர், முகவரி அல்லது மொபைல் எண்ணைபுதுப்பிக்க ரூ.75

- கைரேகைகள், கருவிழி ஸ்கேன் அல்லது புகைப்படத்தை புதுப்பிக்க ரூ.125
- 2026 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி வரை இலவச ஆன்லைன் ஆவண புதுப்பிப்புகள், அதன் பிறகு ஒரு பதிவு மையத்தில் ரூ.75 செலவாகும்
- ஆதார் மறுபதிப்பு கோரிக்கைகளுக்கு ரூ.40
- வீட்டு சேர்க்கை சேவை: முதல் நபருக்கு ரூ.700 மற்றும் அதே முகவரியில் ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் ரூ.350

இரண்டாவது மாற்றம் - ஆதார்-பான் இணைப்பு கட்டாயம்: பான் கார்டு வைத்திருக்கும் அனைவருமே 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனவரி 1, 2026 முதல் பான் கார்டு செயலிழக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு நிதி அல்லது வரி தொடர்பான நோக்கங்களுக்காக உங்கள் பான் கார்ட்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த காலக்கெடுவோடு சேர்த்து - புதிய பான் கார்டு விண்ணப்பதாரர்களுக்கான (New PAN card applicants) செயல்முறையின் ஒரு பகுதியாக ஆதார் சரிபார்ப்பும் நடக்கும்.

மூன்றாவது மாற்றம்: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" (Know Your Customer - KYC) நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் கீழ் நீங்கள் இப்போது கீழ்வரும் 3 வழிகளில் கேஒய்சி செயல்முறையை முன்னெப்போதை விடவும் எளிமையாக முடிக்கலாம்:

1. ஆதார் ஓடிபி சரிபார்ப்பு (Aadhaar OTP verification)
2. வீடியோ கேஒய்சி (2. Video KYC)
3. நேருக்கு நேர் சரிபார்ப்பு ( Face-to-face verification). இந்த செயல்முறைகள் ஆனது முற்றிலும் காகிதமில்லா மற்றும் நேரத்தை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் ஏன் முக்கியம்? இந்த மாற்றங்கள் ஆனது, ஆதார் நிர்வாகத்தை கணிசமாக எளிதாக்கும் மற்றும் பயனர்களுக்கு மதிப்புமிக்க நேரத்தை மிச்சப்படுத்தும். வீட்டிலிருந்தே விவரங்களை புதுப்பிக்கும் திறன் வசதியை சேர்க்கிறது, அதே நேரத்தில் இறுக்கமான சரிபார்ப்பு தரவு பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

இருப்பினும், ஆதார்-பான் இணைப்பு காலக்கெடு மிக முக்கியமானது. அதை தவறவிடுவது பின்னர் நிதி சிரமங்களுக்கு வழிவகுக்கும். சிக்கல்களை தவிர்க்க, உங்கள் ஆதார் மற்றும் பான் உடனடியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்து, உங்கள் ஆவணங்களை ஆன்லைன் சரிபார்ப்புக்கு தயாராக வைத்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Aadhaar Card New Rules 3 Important Changes Coming To Effect From November 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X