120 கோடி பேரின் உடலை அடையாளம் காட்டாது ஆதார்.!
நம்முடைய ஆதாரை வைத்துக் கொண்டு அதில் கண் கருவிழி, கைரேகை, வங்கி கணக்கு எண், பான் எண், செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
நம்முடைய ஆதாரை வைத்துக் கொண்டு அதில் கண் கருவிழி, கைரேகை, வங்கி கணக்கு எண், பான் எண், செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இறந்த பிறகு ஆதாரை வைத்துக் கொண்டு அடையாளம் காண முடியாது என்பது தான் பெரும் வருந்த கூடிய செயலாக மாறியுள்ளது. ஆதார் என்று கொண்டு வந்து பொது மக்களை அலைக்கழிக்க வைத்தது தான் மிச்சமாகியுள்ளது.

ஆதார் கட்டாயம்:
ஆதார் அடையாள அட்டை சலுகை, மத்திய மாநில , மாநில அரசுகளின் நலத் திட்ட உதவிகளுக்கும், பாஸ்போட் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாகப்பட்டுள்ளது. இது குறித்து உச்சநீதி மன்றமும் தனது தீர்ப்பில் வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

ஆதார் தேவை இல்லை:
வங்கி சேவை, நீட் தேர்வு, பல்கலைக்கழகத் தேர்வு, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் எண் காட்டாயம் தேவைப்படாது என்று ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆதார் ஆணையம் விளக்கம்:
ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முடியாது எனத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

மனு தாக்கல்:
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஆதார் தரவுகளைப் பயன்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அமித் சகுனி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

ஆணையம் மறுப்பு:
இந்த மனுவுக்குத் தனித்துவ அடையாள ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தனித்துவ அடையாள ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

120 கோடி பேருக்கு கடினம்:
ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை ஒன்றுக்கு ஒன்று என்கிற அளவில்தான் ஒப்பிட முடியும் என்றும் அதற்கும் ஆதார் எண் தேவை என்றும் தெரிவித்தது. அடையாளம் தெரியாத உடலின் பயோமெட்ரிக் தரவை 120கோடிப் பேரின் தரவுகளுடன் ஒப்பிட்டுக் கண்டறிவது கடினம் என்றும் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications