தவறி விழந்த பயணி., 1 கி.மீ., ரயிலை ரிவர்ஸ் எடுத்த ஓட்டுநர்- என்ன நடந்தது தெரியுமா?
ரயிலில் விழுந்த தவறி விழுந்த பயணியை தூக்குவதற்கு ரயிலை 1 கிலோ மீட்டர் ரிவர்ஸ் எடுத்து உள்ளனர் ஓட்டநர் குழு.

மின்சார ரயில்
சாலையில் பயணிகள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார ரயில் பெரும்பாலான இடங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி அநேக இடங்களில் கூட்ட நெரிசல்களும் அதிகமாகவே காணப்படுகிறது.

ரயிலில் தொங்கியபடி செல்வது
அதுமட்டுமின்ற பல இடங்களில் லோக்கல் பசங்க என்று தங்களை சொல்லிக் கொள்ளும் இளைஞர்கள். ரயிலில் தொங்கியபடி செல்வது. ரயில் ஓடத் தொடங்கும் போது பல வித்தைகள் காட்டுவது என்று தகாத முறைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம்
அதேநேரத்தில் பீக் ஹவர் என்று சொல்லப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் கூட்ட நெரிசலில் தூங்கி செல்வதும் உண்டு.

பாட்டீல் என்ற பயணி தவறி விழுந்துள்ளார்
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பர்தண்டே, மாஹேஜி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் இருந்து ராகுல் பாட்டீல் என்ற பயணி தவறி விழுந்துள்ளார்.

பாட்டீல் உடன் வந்த நண்பர்கள்
இதையடுத்து பதறி போன ராகுல் பாட்டீல் உடன் வந்த நண்பர்கள் சங்கிலியைப் இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். ரயில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. எனவே சுமார் 1 கிலோமீட்டர் தள்ளி வந்த பிறகு ரயில் நின்றுள்ளது.

ஓட்டுநர் குழு செயல்பாடு
தனது நண்பர் தவறி விழுந்த தகவல் குறித்து ஓட்டுநர் குழுவுக்கு தெரிவித்துள்ளனர். இரு ஸ்டேஷனுக்கு நடுவில் ராகுல் பாட்டீல் விழுந்துள்ளார் என்பதால் யாரும் அவரை காப்பாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதை ஓட்டுநர் குழு உணர்ந்துள்ளனர்.

சுமார் 1 கிலோ மீட்டர் ரயில் ரிவர்ஸ்
இதையடுத்து நடுவழியில் தவறி விழுந்த படுகாயமடைந்துள்ள பயணியை அப்படியே விட்டுச் செல்ல மனிமில்லாத ஓட்டுநர் குழு சுமார் 1 கிலோ மீட்டர் ரயிலை ரிவர்ஸ் எடுத்து சென்றுள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதி
அதன்பின் ராகுல் மீட்கப்பட்டு ரயில் மூலம் அடுத்த ரயில் நிலையம் கொண்டு வந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் குழுவுக்கு பாராட்டு
இதையடுத்து ரயில் 1 மணி நேரம் தாமதமாக சென்றது. இருப்பினும் பயணியை மீட்க மனிதாபிமானத்துடன் சிறப்பாக செயல்பட்ட ஓட்டுநர் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுபோன்ற ரயிலை ரிவர்ஸ் எடுத்து செல்வது என்பது சாதாரன விஷயமில்லை எனவும் அதே டிராக்கில் சிறிது தூரத்தில் வேறு ரயில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது எனவும் சிலர் கருத்து தெரிவித்து. சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் குழுவுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications