இந்த கருவி எய்ட்ஸ் நோயை 15 நிமிடங்களில் கண்டறிந்து விடும்
கோலம்பியா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விலை குறைந்த ஸ்மார்ட்போன் டாங்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளனர், இந்த டாங்கிள் ஒரு துளி ரத்தத்தை கொண்டு எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களை 15 நிமிடங்களில் கண்டறிந்து விடும்.
உலகில் பலருக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் எய்ட்ஸ் மற்றும் சிபில்லிஸ் போன்ற நோய்களை கண்டறிய பல நாட்கள் ஆகின்றது, இந்த கருவி மூலம் இனி அந்த பிரச்சனை இருக்காது.

இந்த டாங்கிளை ஸ்மார்ட்போன் மற்றும் கணினியுடன் எளிதாக இணைக்க முடியும், அந்நேரத்தில் தேவையான மின்சாரத்தை எடுத்து கொள்கின்றது. இந்த கருவி மூலம் இனி கொடிய நோய்களையும் குறைந்த கால அளவில் கண்டறிய முடியும்.
தற்சமயம் இந்நோய்களை கண்டறியும் கருவிகளின் ஆரம்ப விலை ஏறத்தாழ 11 லட்சமாக இருக்கும் நிலையில் புதிய டாங்கிள் ரூபாய் 3000 பட்ஜெட்டிற்க்குள் கிடைக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications