ரஷ்யா: கிரமாத்தின் தோட்டத்தில் தீடிரென்று ஏற்பட்ட மிகப்பெரிய ஓட்டை: வைரல்.! காரணம் என்ன?
இந்த குழி மிக பிரம்மாண்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது, பல அடுக்கு மாடிக் கட்டிடம் அளவிற்கு இது அழமாக இருக்கிறது.
உத்திரகண்ட், நிகோபர் தீவுகளில் இன்று(மே 18) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.9 என பதிவானது. நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9 என பதிவானது.

தற்சமயம் உலகம் வெப்பம் அதிகரிக்க இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள் அடிக்கடி நிகழந்து வருகிறது. குறிப்பாக கடல் கொந்தளிப்பது, மழை பொய்யப்பது, தவறான காலத்தில் மழை பெய்து அதிக அழிவை ஏற்படுத்துவது சூறாவளி, புயல், நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படுவது என்று உலகில் அடிக்கடி நிறைய இயற்கை பேரழிவுகள் நடக்கிறது. அதில் சிங்க் ஓல் எனப்படும் புதைகுழி அழிவும் ஒன்றாகும்.
குறிப்பாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் புயல், நிலச்சரிவு, நிலநடுக்கம் நிகழும்,இந்நிலையில் ரஷ்யாவில் நேற்று கிராமம் ஒன்றில் சின்க்ஹோல் நிகழ்வு நடந்துள்ளது, மிகப்பெரிய சின்க்ஹோல் ஒன்று
துலு நகரத்தில் இருக்கும் தேடிலோவா என்ற கிராமத்தில் உருவாகி உள்ளது.
இந்த குழி மிக பிரம்மாண்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது, பல அடுக்கு மாடிக் கட்டிடம் அளவிற்கு இது அழமாக இருக்கிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்த புதைக்குழி காரணமாக அந்த பகுதியில் இருந்த மொத்த தோட்டமும் பூமிக்கு உள்ளே சென்றுள்ளது. இதில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications