Just In
- 5 hrs ago கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- 5 hrs ago மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- 5 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 6 hrs ago Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
Don't Miss
- Lifestyle வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
- Sports குட்டி யுவராஜை அப்படியே தூக்கிட்டு வாங்க டா.. யார் இந்த அபிஷேக் சர்மா? 16 பந்தில் அரைசதம்
- Automobiles சொகுசு வாழ்க்கையில் மிதக்கும் விஜய் பட வில்லன்!! கார்களை விற்றாலே பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்!
- News உதயசூரியன் சின்னம் வேண்டாம்.. பம்பரம் இல்லை என்றாலும் பிரச்சனையில்லை.. துரை வைகோ உறுதி
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆசையை தூண்டிய விளம்பரம்: 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி- எப்படி தெரியுமா?
சமூகவலைதளங்களில் விளம்பரங்களை பார்த்து சென்னையை சேர்ந்த நபர் பொருட்களை வாங்க வங்கிக் கணக்கு பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். இதுகுறித்த புகாரில் ஏமாற்றியவரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரதானமாக இருக்கும் சமூகவலைதள பயன்பாடு
சமூகவலைதளம் பயன்படுத்தாத நபர்களை விரல்கள் விட்டு எண்ணி விடலாம். சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டா போன்ற பயன்பாடுகளில் ஏராளமானோர் தங்களது சுயக் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வீட்டிலேயே முடங்கும் நிலை
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதில் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களையும், ஆன்லைன் விளையாட்டுகளையும் கையாள தொடங்கினர். வாட்ஸ்அப் குழுக்கள் அதிகரிக்கத் தொடங்கியது.
பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்கள்
பேஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தும்போது விளம்பரங்கள் காண்பிக்கப்படுவது வழக்கம். இதில் சில விளம்பரங்களில் குறைந்த விலையில் தரமான பொருட்கள் போன்று காண்பிக்கப்படும். அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஆடை, அணிகலன்கள் குறைந்த விலையில் காண்பிக்கப்படுவது வழக்கம்.
பேஸ்புக் கணக்கில் காண்பிக்கப்பட்ட விளம்பரம்
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்ற பெண் அதுபோன்ற விளம்பரத்தை பார்த்து பொருட்கள் வாங்க பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். சென்னையை சேர்ந்த இந்திரா தன்னுடைய பேஸ்புக் கணக்கை பயன்படுத்தும் போது விளம்பரங்களை பார்த்துள்ளார்.
சேல்(Sale) என்ற குழு
இந்திரா பார்த்த விளம்பரங்களில் காண்பிக்கப்பட்ட ஆடை தனக்கு பிடிக்கவே அது குறித்த விவரங்களை அலசி பார்த்துள்ளார். இதையடுத்து இந்திராவின் மொபைல் எண் வாட்ஸ்அப்பில் சேல்(Sale) என்ற குழுவில் சேர்க்கப்பட்டு ஆடைகள் குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து வந்துள்ளது.
ஆன்லைன் ரயில் டிக்கெட்டில் இந்தி திணிப்பு சர்ச்சை? தெற்கு ரயில்வே கூறிய விளக்கம் இதுதான்.!
உறுப்பினர்களாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள்
இந்திரா சேர்க்கப்பட்ட சேல் என்ற குழுவில் தொடர்ந்து ஆடைகள் குறித்த விளம்பரங்கள் வந்துள்ளன. அந்த குழுவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்
சேல் என்ற குழுவில் உள்ள அட்மின், தங்களிடம் தரமான துணிகள், அணிகலன்கள் உள்ளதாகவும் குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு இந்த பொருட்கள் வேண்டுமென்றால் தனது வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் செலுத்தியவுடன் கொரியர் மூலம் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திரா வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கம்
இதையடுத்து தனக்கு பிடித்த பொருட்களை வாங்க விரும்பிய இந்திரா அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய சிறிது நேரத்திலேயே இந்திரா அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
குரூப் அட்மின் கைது
வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த இந்திரா, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சேல் குரூப் அட்மினை கைது செய்துள்ளனர். அவர் தாம்பரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
போலீஸார் விசாரணை
அவரிடம் நடத்திய விசாரணையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜேந்திரனிடம் போலீஸார் விசாரணை துரிதப்படுத்தினர்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470