75,000 கிமீ கேபிள் மூலம் இந்தியா முழுக்க இன்டெர்நெட் வசதி - மத்திய அமைச்சர் உறுதி
இந்தியாவின் அனைத்து கிராமங்களையும் இன்டெர்நெட் வசதிகளை ஏற்படுத்த அடுத்த மூன்று ஆண்டுகளில் 750,000 கிமீ கேபிள் பயன்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரத்தை வழங்க வழிவகுக்கும் என்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பங்கேற்ற 20 பேரை கவுரவிக்கவும் நிகழ்ச்சியில் ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மேலும் தொழில்நுட்பத்தின் சகதி குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்சமயம் 300 மில்லியன் இன்டெர்நெட் பயனாளிகள் இருப்பதோடு விரைவில் அமெரிக்காவை முந்தி உலக அளவில் இன்டெர்நெட் பயன்படுபடுத்துவோர் எண்னிக்கையில் இரண்டாம் இடம் பிடிப்போம் என்றும் மின்சாதன உற்பத்தியிலும் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications