Just In
- 7 min ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 40 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- 47 min ago Smart TV-யை தூக்கி போடுங்க.. 250 இன்ச் டிஸ்பிளே Projector வாங்குங்க.. மீண்டும் 50% தள்ளுபடியுடன் விற்பனை..
- 3 hrs ago முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
Don't Miss
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
முகேஷ் அம்பானியின் உயரத்தை "டச்" கூட செய்ய முடியாத அனில் அம்பானி; ஏன்?
திருபாய் அம்பானி நிறுவனம் சார்ந்த எந்த விதமான சொத்தையும் எழுதி வைக்கவில்லை என்பதால், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியும், துணைத் தலைவராகவும் அனில் அம்பானியும் ஆனார்கள்.
மறைந்த திருபாய் அம்பானி இந்தியாவின் முன்னணி வர்த்தகர் மற்றும் ஒரு தேசிய ஹீரோவும் கூட ஆவார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன - அவர்கள் தான் முகேஷ் மற்றும் அனில் அம்பானி. 2002 ஆம் ஆண்டில், திருபாய் அம்பானி இறந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆனது அவரது மகன்களால் ஆகியோரால் கையகப்படுத்தப்பட்டது.
திருபாய் அம்பானி நிறுவனம் சார்ந்த எந்த விதமான சொத்தையும் எழுதி வைக்கவில்லை என்பதால், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியும், துணைத் தலைவராகவும் அனில் அம்பானியும் ஆனார்கள். ஒரே கோட்டில் தொடங்கினாலும் கூட அனில் அம்பானியால் அண்ணன் முகேஷ் அம்பானி சம்பாதிக்கும் வெற்றிகளையும், பணத்தையும் ஈட்ட முடியவில்லை. அது ஏன் என்பதற்கான 7 காரணங்களை உள்ளடக்கிய தொகுப்பே இது.
1. தொலைநோக்கு பார்வை கொண்ட முதலீடு!
சகோதரர்கள் இருவருக்குமே - தாய் கோகிலாபென் அம்பானி அவர்களால் உறுதி செய்யப்பட்டபடி - நிறுவனத்தில் சமமான பங்கைக் கொண்டிருந்தனர். ஆனால் முகேஷே அவரது தொலைநோக்கு பார்வையின் கீழ் எதிர்காலத்தை மனதில் வைத்து முதலீடுகளை செய்வதன் மூலம் எக்கச்சக்கமான பணங்களை உருவாக்கினார், அது அவருக்கு லாபகரமானதாக மாறியது. இப்போது அவர் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் அந்த அளவிற்கு அவரிடம் பணம் உள்ளது. மறுபுறம் உள்ள அனில், கடற்படை, பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்தார், ஆனால் அவரால் ரிலையன்ஸ் போன்று அதிக அளவிலான பணத்தை உருவாக்க முடியவில்லை. அது அவரை கடன்களுக்குள் தள்ளியது.
2. எதிர்காலத்தின் மீதான பார்வை!
முகேஷ் அம்பானி அவர் முதலீடு செய்யும் திட்டங்களின் மீதான வருங்கால பார்வையையும் கொண்டு இருந்தார். இது அவர் மறுபடியும் அதிக அளவிலான பணத்தை சம்பாதிக்க உதவியது. இதனால் அவர் மென்மேலும் அவைகளின் மீது எதிர்கால திட்டங்களின் மீது முதலீடு செய்தார். எடுத்துக்காட்டிற்கு, ரிலையன்ஸ் ஜியோவை எடுத்துக் கொள்ளுங்கள், இது தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. 3ஜி வெளியாகும் நேரத்தில், அதிவேக 4ஜி இணையத்திற்காக 2010 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி சுமார் 34 பில்லியன் டாலர்களை அவர் முதலீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. அவர் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினார்!
2003 ஆம் ஆண்டில் திருபாயின் பிறந்த நாள் விழாவில், முகேஷ் இந்தியாவில் ரிலையன்ஸ் இன்போகாம் சேவைகளை அறிமுகப்படுத்தினார். மொபைல் போன்களில் நிகழ்த்தப்படும் அழைப்புகள் ஆனது 50 பைசாவை விட குறைவானதாக இருக்க வேண்டும் என்று திருபாய் கனவு கண்டதை முகேஷ் அறிவார்.
இது அம்பானியின் இன்போகாம் திட்டத்தின் மூலம் நிஜமானது, வியாபாரமும் ஆனது.
4. பிறவியிலேயே தலைவராக இருந்தார்!
அனில் அம்பானி எல்லா நிலைகளையும் சரிக்கு சமமான பங்கை வழங்கத் தயாராக இருந்தார். ஆனால் முகேஷ் அம்பானியோ எப்போதும் தந்தையின் தலைமையின் கீழ் முழு அதிகாரத்தையும் கையில் வைத்திருக்க விரும்பினார். ஆக முகேஷ் அவர் தந்தை உயிரோடு இருக்கும் போதே ஒரு மாபெரும் தலைவராக உருவாக தொடங்கி விட்டார் என்பதை அறிய முடிகிறது.
5. முகேஷ் அம்பானி 10 ஆண்டுகளில் அனைத்தையும் மாற்றினார்:
2005 ஆம் ஆண்டில், ரூ.99000 கோடி மதிப்பிலான பேரரசு இரு சகோதரர்களுக்கும் இடையே சமமாக பிரிக்கப்பட்டது. அனில் அம்பானி ரிலையன்ஸ் இன்போகாம் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் கேப்பிடலை கையில் எடுக்க, முகேஷ் அம்பானியோ ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை தேர்ந்தெடுத்தார். ஒரு வருடத்தில், அனில், தனது பல தொழில்களின் காரணமாக, 550 கோடி ரூபாய் ஈட்டி நாட்டின் 3 வது மிகப் பெரிய பணக்காரராக ஆனார். மறுபுறம், முகேஷ் நீண்ட காலத்திற்கு வேலை செய்து. 10 ஆண்டுகளில் சுமார் 41 பில்லியன் டாலர்களை ஈட்டி மிகப்பெரிய உச்சங்களை எல்லாம் தொட்டார்.
6. ஒரு நேரத்தில் ஒரு வணிக இலக்கு!
அனில் ஒரே நேரத்தில் பல விஷயங்களின் கீழ் வேலை செய்வதை நேசித்தார். அது அவரை உயரங்களுக்கு கொண்டு சென்றது. மறுபுறம் முகேஷ் பரிபாலனத்துடன் ஒரு நேரத்தில் ஒரு காரியம் என்கிற கொள்கையை கையாண்டார். முகேஷ் எப்போதுமே மிக அதிக அளவிலான வியாபாரங்கள் மற்றும் பண வரத்தை பெற பல ஆண்டுகள் வரை காத்திருக்க முடியும். மறுபுறம், அனில் எப்பொழுதும் பணத்தை விரைவாக திரும்பப் பெற்று கொண்டே வந்தார். அதாவது அனில் போலல்லாமல், முகேஷ் முதலில் தனது வியாபாரத்தை அபிவிருத்தி செய்தார், பின்னர் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
7. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்!
அனில் மிகச்சிறிய வாழ்க்கையை வாழ விரும்பினார். அவர் எந்த ஒரு வியாபாரத்தையும் ஒரு மைக்ரோ அளவில் நிர்வகிக்கவில்லை, முகேஷ் ஒரு மணிநேர இடைவெளியில் கூட சந்திப்புகளை நடத்தினார் என்று கூறப்படுகிறது. முகேஷ் "விவரங்களின் கடவுள்" என்று அழைக்கப்படுவாராம். அவருடைய தொழில்களில் அவர் எந்த அளவு ஊடுருவி உள்ளார் என்பதையும், அவரின் தனிப்பட்ட பங்களிப்பையும் புரிந்து கொள்ள நாம் அவரை ஆழமாக கவனிக்க வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470