6000 ரயில் நிலையங்களில் அதிவேக வைபை சேவை- அமைச்சர் பியூஸ்கோயல்.!
இந்நிலையில், 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை சேவை இன்னும் 6-8 மாதங்களில் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசு மத்திய அரசின் தலைமை ஏற்ற பிறகு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நாடுமுழுவதும் நிறைவேற்ற பாடுபட்டு வருகின்றது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றது. ஜிடிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான பொது மக்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகின்றது.

இந்நிலையில், 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை சேவை இன்னும் 6-8 மாதங்களில் நிறுவப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

சம்ளேன கூட்டம்:
இந்திய வர்த்தக சங்க கூட்டமைப்பு மற்றும் சம்மேளத்தின் ஸ்மார்ட் ரயில்வே கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் பங்கேற்றார். இதில் குறிப்பிட்டதாவது: பிறகு நாட்டின் தொலை தூரத்தை கருத்தில் கொண்டால், தொழில் நுட்பத்தை அணுகுவதே அடிப்படை அவசியம் என்று அவர் தெரிவித்தார். இதற்காக இந்திய ரயில்வேயில் அதிவேக வை-பை சேவை வழங்கப்படுகிறது.

6000 ரயில் நிலையங்களில் வை-பை:
ஆறு அல்லது எட்டு மாதங்களில் 6 ஆயிரம் ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை சேவை துவங்கப்படும். இதற்காக ஸ்மார்ட் திட்டங்களை ரயில்வேயில் நாங்கள் செயல்படுத்தி வருகின்றோம். இதற்காக தனி கவனம் செலுத்தி வருகின்றோம் என பியூஸ்கோயல் தெரிவித்தார்.

4 ஆண்டுகளின் மாற்றம்:
ரயில்வே துறையில் அதிவே வை-பை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்துவதால் கூடுதல் கவனத்துடன் உற்சாமாக செயல்பட தயாராகி வருகின்றோம். இது 4 ஆண்டுகளில் மாற்றம் என பியூஸ்கோயல் தெரிவித்தார்.

ரயில் நேரத்தை தெளிவாக அறிய முடிகிறது:
ரயில்வே துறையில் ஜிபிஎஸ் வசதி அறிமுகப்படுத்திய பிறகு 73-74 சதவீதம் ரயில் வந்து செல்லும் நேரங்கள் தெளிவாக காணமுடிகின்றது. இதில் ரயில்வே அதிகாரிகளுக்கும் நேரம் மிச்சாமிகயுள்ளது. மேலும், ஜிபிஎஸ் போட்டுள்ளதால், ரயில் எங்கியிருந்து வருகின்றது. ரயில் தாமதம் உள்ளிட்டவைகளை தெளிவாக மொபையில் போனில் மூலம் அறிய முடிகின்றது.

விமானத்தை போல:
ரயில்வே வாரிய தலைவர் அஸ்வனி லோகானி அறிவுறுத்தலின்படி, ரயில்களில் விமானங்களை போல, பயணிகள் ரயிலில் உணவு உட்கொண்ட பிறகு குப்பைகளையும் போட வசதியாக தொட்டிகளையும் வைக்கவும். அதில் இருந்து உணவு கழிவுகளை அப்புறப்படுத்தவும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மேலும் கழிவறைகளையும் தூய்மையானதாகவும் வைக்கவும் ஊழியர்கள் ஈடுபத்தப்படுவார்கள் என்று அமைச்சர் பியூஸ்கோயல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications