6 லட்சம் Aadhaar எண்கள் ரத்து: உங்களது ஆதாரின் நிலையை தெரிந்துகொள்ள "இங்கே" சரிபார்க்கவும்.!
தற்போது இந்தியாவில் மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது ஆதார். அதாவது கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து இடங்களிலும் தேவைப்படும் ஒரு மிக முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆதார்.

ஆதார்
இந்நிலையில் மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு(Unique Identification Authority of India) சார்பில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் 6 லட்சம் ஆதார் எண்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து தெரிவித்தது என்வென்றால், கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில் போலி ஆதார் எண்கள் மற்றும் ஆதார் அட்டை உபயோகிக்கப்படுவதாகவும், அதை கருத்தில் கொண்டு யு.ஐ.டி.ஏ.ஐ இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

5,98,999 ஆதார் எண்கள் ரத்து
மேலும் நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது போலி அடையாள அட்டைகள் உருவாவதை தடுக்க அரவு என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இணை அமைச்சர், போலி மற்றும் நகல் ஆதார் கார்டுகளால்உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அதன் ஒரு பகுதியாக 5,98,999 ஆதார் எண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், இதற்காக ஆதார் அட்டையில் கூடுதல் சரிபார்ப்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி
அதாவது இதற்குமுன்பு கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி போன்றவை தான் அடையாளங்களாக இருந்தன. ஆனால் தற்போது அவற்றுடன் முகத்தின் முழு புகைப்படமும் ஒரு அடையாளமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இதன்மூலம் போலியானவை எளிமையாக கண்டறியப்படும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆதார் அட்டைக்கு மேலும் ஒரு பாதுகாப்பு வலுசேர்க்கப்பட்டிருக்கிறது.

நமது ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்ப்பது எப்படி?
நமது ஆதார் எண் உண்மையானதா அல்லது போலியானதா என்பதைச் சரிபார்க்க சில வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் உங்களது போனில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும் (https://resident.uidai.gov.in/offlineaadhaar).

வழிமுறை-2
அடுத்து அந்த தளத்தில் உள்ள Aadhaar Verify எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்பு உங்களது 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க விர்சுவல் ஐடி-ஐ கொடுக்கவும்.

வழிமுறை-4
நீங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு முடித்ததும், திரையில் காட்டப்படும் பாதுகாப்பு குறியீட்டை டைப் செய்து, ஒன்டைம் பாஸ்வேர்ட் எனப்படும் ஓடிபி(OTP)-ஐ கோரவும்
குறிப்பாக நீங்கள் கொடுத்த ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடிக்கான ஓடிபி-ஐ உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறுவீர்கள். இப்போது உங்களுக்கு கிடைத்த ஓடிபி-ஐ இந்த இணையதளத்தில் உள்ளிடவும்.

வழிமுறை-5
UIDAI தளத்தில் நீங்கள் ஓடிபி-ஐ பதிவிட்ட பின்பு மற்றொரு பக்கத்திற்கு செல்வீர்கள். அங்கு உங்களது ஆதார் உண்மையானதா, போலியானதா என்பது பற்றிய விவரங்கள் தெரிந்துவிடும்.
குறிப்பாக இந்த பக்கத்தில் தெரியும் ஆதார் எண்ணில் உங்களது பெயர், வயது, பாலினம், மாநிலம் போன்ற விவரங்கள் சரியாக இருந்தால் உங்களுடைய உண்மையான ஐடி என்று எடுத்துக்கொள்ளலாம்.

அதேபோல் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, ஆதார் கார்ட் நகலை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் நகலை தவறாக கையாளக் கூடும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அப்படி அத்தியாவசிய தேவைக்கு ஆதார் அட்டையை பிரவுசிங் சென்டர் உட்பட பொது இடங்களில் பதிவிறக்கம் செய்யும் பட்சத்தில் உடனே அதை டெலிட் செய்யும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications