மின்னல் வேகத்தில் 5ஜி: 3லட்சம் பொது சேவை மையம், மலிவான கட்டண திட்டம்.!
5g, services, affordable, assures, central government, telecom, Smartphone, Technology, News, India, 5ஜி சேவை, மலிவான கடண்டம், இந்தியா, முழுக்க கிடைக்க ஏற்பாடு, மத்திய அரசு நடவடிக்கை, 5ஜி சேவை, டெல
இன்று சூப்பர் ஹைவே காலத்தில் வசிக்கின்றோம். இதனால் நாம் 2ஜி, 3ஜி, 4ஜியை தாண்டி தற்போது 5ஜியை நோக்கி அடியெடுத்து வைத்து விட்டோம்.
தற்போது இந்தியாவில் 5ஜி சேவை பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகி வருகின்றன. மேலும், ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு முதல் 5ஜி சேவையை வழங்க முனைப்புடன் இருக்கின்றது.

மேலும், நாம் 5ஜி சேவைகளால் நாம் வீடியோ, ஆடியோ, இணையத்தில் அதிவேகத்தில் காணவும் பதிவேற்றவும், பதிவிறக்கவும் செய்யும் முடியும்.
இந்நிலையில் 5ஜி சேவையை இந்தியா முழுக்க மலிவான கட்டணத்தில் பயன்படுத்தவும் வகையில், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 3 லட்சம் பொது சேவை மையங்களையும் ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கின்றது.

2ஜி, 3ஜி, 4ஜி சேவை:
இந்தியாவில் நாம் தற்போது, 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகள் பரவலாக பயன்படுத்தி வருகின்றோம். இந்தியர்களும் தற்போது சூப்பர் ஹைவேயில் சென்று கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், 4ஜியையும் தாண்டி நாம் 5ஜி சேவையை நோக்கி பயணிக்க துவங்கி விட்டோம்.
இதனால் நாம் முன்பை விட பன்மடங்கு வேகத்தில், இணையத்தை பயன்படுத்த முடிவும்.

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி:
அடுத்தாண்டு முதல் ரிலையன்ஸ் ஜியோவும் தனது 5ஜி சேவையை இந்தியா முழுக்கவும் அறிமுக திட்டமிட்டுள்ளது.
மேலும், மக்கள் தொகை பெருக்கும் அதிகமாக இருப்பதால், மலிவான கட்டணத்தில் 5ஜி சேவையை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

5ஜி சேவைகள் வழங்க முடிவு:
5ஜி சேவைகள் மலிவான கட்டணத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில்,மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஊரகப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதற்காக 3 லட்சம் பொது சேவை மையங்கள் மூலம், ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் தலா இரண்டு வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் மற்றும் அதிவேக இணைய இணைப்புகளை, வழங்க முடிவு செய்துள்ளது.

மலிவான கட்டணம்:
ஊரகப் பகுதிகளிலும் 5ஜி சேவைக்கான சோதனைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு ஃபைபர் இண்டர்நெட் இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில், 5ஜி சேவைகளை கட்டுபடியாகக் கூடிய கட்டணத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெரிய அளவில் ஏலம்:
இதற்காக, இதுவரை இல்லாத அளவுக்கு, மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 8,600 மெகாஹெர்ட்ஸ் மொபைல் ஏர்வேவ்ஸ் ஏலம்விடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.6 கோடி வருவாய் எதிர்பார்ப்பு:
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் அரசு 6 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணையமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications