ஆன்லைனில் மணல் விற்பனையை துவங்கிய தமிழக அரசு: உள்ளே வலைதளம்.!
முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து மணல் வினியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள, இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு நேற்று மாலை துவங்கப்பட்டுள்ளது, அதன்படி தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம், இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு செய்யப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால் தமிழ்நாடு மணல் இணைய சேவை மூலம் இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்துக்கொள்ளால் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேவை பல்வேறு
மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான கூறவேண்டும்.

11,000 யூனிட்டுகள்
மேலும் தமிழக அரசு சார்பில் வெளிவந்த மணல் முன்பதிவு சேவை மூலம் முதற்கட்டமாக 11,000 யூனிட்டுகள் மணல் மட்டும் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை
பின்பு முதலில் பதிவு செய்பவருக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்து மணல் வினியோகிக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வலைதளம்:
இறுக்குமதி மணலுக்கு முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.tnsand.in/ என்ற வலைதளம் மூலம் பதிவு செய்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த வலைதளம் எளிமையாக பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

விலை:
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி சுமார் 4.5 மெட்ரிக் டன் எடை கொண்ட ஒரு யூனிட் மணலின் விலை ரூ.9,990-க்கு விற்பனை செய்ப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதன்பின்பு 2யூனிட் மணல் 19,890 விலையிலும், 3-யூனிட் மணல் 29,970
விலையிலும், 4யூனிட் மணல் 39,960 விலையிலும், 5யூனிட் மணல் 49,9500விலையிலும் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications