டெலிட் பேஸ்புக்: மார்க் ஸுக்கர்பெர்க் உட்பட 5கோடி பயனர்களின் கணக்குகள் 'ஹேக்".!
பின்பு இதை தொடர்ந்து உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் பிரைவசி குறித்து விசாரணைகள் துவங்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது, மேலும் நேற்று இந்நிறுவனம் சார்பாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது, அது என்னவென்றால் பேஸ்புக்கின் 5கோடி பயனர்களின் கணக்குகளை கையாளக்கூடிய
டிஜிட்டல் லாகின் கோட்களை திருடிவிட்டதாக அந்நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் இதுவே பேஸ்புக்கின் மிக மோசமான பாதுகர்பு அம்ச பாதிப்பாக கருதப்படுகிறது, பின்ப பல்வேறு மக்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்
பின்பு பேஸ்புக் பயனர்களின் கணக்குகள் தவறாக பயன்படுத்தப்பட்டதா அல்லது தகவல்கள் திருடப்பட்டதாக என்பதை உறுதி செய்ய வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹேக் செய்தவர்களின் இடம் மற்றும் எந்தக் குழுவினர் குறித்துக் கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க் ஸுக்கர்பெர்க்
இப்போது வெளிவந்த தகவலின் படி, மிகப்பெரிய அளவில் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க், ஹேக் விவகாரம் மிகவும் மோசமான ஒன்று.
பின்பு தலைமைச் செயல் அதிகாரி ஷெர்ல் சாண்ட்பெர்க் பேஸ்புக் கணக்குடன், தனது கணக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2.6 சதவீதம்
மேலும் இதன் காரணமாக பேஸ்புக்கின் பங்குகள் 2.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்கா, பேஸ்புக்கின் 87 மில்லியன் பயனர்களின் தவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியது, தற்சமயம் பேஸ்புக்கின் 5கோடி பயனர்களின் கணக்குகள் 'ஹேக்" செய்யப்பட்டுள்ளது.

விசாரணை
பின்பு இதை தொடர்ந்து உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் பிரைவசி குறித்து விசாரணைகள் துவங்கப்பட்டுள்ளன, குறிப்பாக #deleteFacebook என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் முழக்கங்களும் பரவி வருகின்றன. மேலும் அமெரிக்கா சார்பில் தகவல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுப்படுத்துவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications