புதிய ஏர்டெல் 4ஜி சிம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள்..!
ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்கிரமிப்பு நிறைந்த சலுகைகளுக்கு நிகரான புதிய சலுகைகள் மற்றும் திருத்தப்பட்ட சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதின் மூலம் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் செய்தி தலைப்புகளில் இடம் பெற தொடங்கி விட்டது. ஆனால் அந்த சலுகைகள் எல்லாமே பெரும்பாலும் இரண்டுற்க்கும் இடையேயிலேயான கட்டண வேறுபாடுகளை மட்டுமே காட்டுகிறது.
ஏர்டெல் நிறுவனம் அதன் தற்போதைய பயனர்கள் மீதான பிடிப்பை அதிகரித்துக் கொள்ளவும், புதிய பயனர்களை பெருக்கி கொள்ளவும் பல சலுகைகாளை அறிமுகப்படுத்த வேண்டியதுள்ளது என்பது நிதர்சனம். அப்படியாக நீங்கள் ஒரு புதிய ஏர்டெல் 4ஜி சிம் வாங்கி ஏர்டெல் ப்ரீபெயிட் 4ஜி வாடிக்கையாளராக விரும்பினால் அதற்கு முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள 5 முக்கியமான விடயங்கள் இதோ..!

விடயம் #01
உங்கள் தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப கட்டண சலுகைகளை தேர்தெடுக்கும் வண்ணம் ரூ.4/-ல் இருந்து ரோ.4999/- வரையிலான திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது

விடயம் #02
சமீபத்தில் இந்தியாவின் முதல் திறந்த நெட்வொர்க் சேவையை ஏர்டெல் தொடங்கியது. இதன் மூலம் எங்கு ஏர்டெல் டவர்கள் அமைத்துள்ளன அவைகளின் விரிவான அலைவரிசை சார்ந்த விடயங்களை அறிந்துக்கொள்ள முடியும்.

விடயம் #03
ஏர்டெல் இந்தியா முழுவதும் ஒரு பரந்த 4ஜி சேவையை வழங்குகிறது இந்தியா முழுக்க மொத்தம் 300-க்கும் மேற்பட்ட நகரங்கள் ஏர்டெல் 4ஜி சேவை கொண்டுள்ளன உடன் ரூ.25 என்ற அதிரடியான தொடக்க விலை கொண்ட எந்தவொரு 4ஜி டாங்கிள் உடனும் ஒரு இலவச சிம் பெறலாம்

விடயம் #04
ஏர்டெல் சிம் ஆக்டிவேஷன் பற்றி கவலைப்படவே தேவையில்லை. பொதுவாக, இது சரிபார்ப்பிற்கு பின்னர் 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் ஆக்டிவேஷன் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

விடயம் #05
டிஜிட்டல் வேலட் ஆன ஏர்டெல் மணி மூலம் எந்தவொரு ஏர்டெல் உற்பத்திக்கும் ரீசார்ஜ் செய்ய முடியும். மேலும், உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் பகிர்வு நிகழ்த்தவும் ஏர்டெல் வழிவகை செய்கிறது.

மேலும் படிக்க :
உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்..!


Click it and Unblock the Notifications








