வீடியோகேமில் தோல்வியானதால் துப்பாக்கி சூடு 4 பேர் பலி: 11 பேர் காயம் திடுக் தகவல்.!
புளோரிட மாகாணத்தில் ஜாக்சன் வில் நகரில் லேண்டிங் எனும் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அப்போது விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்ததால் சூப்பாக்கி நட
புளோரிட மாகாணத்தில் ஜாக்சன் வில் நகரில் லேண்டிங் எனும் மதுபான விடுதியில் வார விடுமுறையையொட்டி வீடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

அப்போது விளையாட்டு போட்டியில் தோல்வியடைந்ததால் சூப்பாக்கி நடந்தது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடந்தது என்ன?
வீடியோ கேம் போட்டி இணையத்தில் ஒளிபரப்பட்ட போது, அந்த வீடியோ காட்சியில் பல துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.
வீடியோ கேம் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ட்ரிஜி ஜோகாக என்னும் 19 வயது நபர் தனது அனுபவத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தனது வாழ்நாளின் மோசமான தினம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் துப்பாக்கி குண்டு தனது கட்டை விரலை தொட்டுச் சென்று என தனது டுவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார்.

ஓடத் துவங்கிய மக்கள்:
துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் மக்கள் சிதறி ஓட தொடங்கினர். பின் சிறப்பு போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என சோதனையிட்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரால் பலர் மீட்கப்பட்டு அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில் பலருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன. உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கி நடத்தியவர்:
சிக்காவோலை சேர்ந்த டெய்லர் பாய்டெக்ஸ்டெர் துப்பாக்கிதாரியை பார்த்தாக தெரிவித்துள்ளார். நாங்கள் அவரை பார்தோம், இரண்டு கைகளால் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தார். நான் என் வாழ்கை குறித்தும், நண்பர்கள் வாழ்கை குறித்தும் மகிவும் அச்சமடைந்தேன் என டெய்லர் பாய்ஸ்பெடக்ஸ்டெர் கூறினார்.
காயமடைந்தவர் குறித்து அவர்கள் உறவினர்கள் தெரிவிக்காத வரையில் அவர்கள் விவரங்களை வெளியிடப்படமாட்டாது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போட்டி ஒருங்கிணைந்த மேடன் என்ற கால்பந்து வீடியோ கேமின் உரிமை நிறுவனமான ஈஏ ஸ்போட்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தப்படுகின்றது.

குற்றவாளி:
இதுகுறித்து முழு விரங்களையும் புளோரிட போலீசார் வெளியிடவில்லை. மேலும் அந்த நபர் வீடியோகேம் விளையாட்டில் தோற்றதால், பிறரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ளியுள்ளார். பிறகு இந்த அவமானத்தால் அவரும் சுட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார் என அந்நாடு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த சம்பவத்தால் உயிரிழப்பு 4ஐ எட்டியுள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 10ஐ தாண்டியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications