ஏசி மின்கசிவால் மூன்று பேர் உயிரிழப்பு: திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில நடந்த விபரிதம்.!
குளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.
விழுப்புரத்தில் ஏசி பயன்படுத்தியபோது ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 3 பேர் உயிரிழந்தனர், விழுப்புரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வசதித்த ராஜ் என்பவர் தனது மனைவி கலைச்செல்வி, இளைய மகன் கவுதமனுடன் ஏசி பொருத்தப்பட்ட அறையில் இரவு உறங்கியுள்ளார்.

அந்த சமயம் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு, அதன் காரணமாக ரசாயன வாயு அறை முழுவதும் பரவுயுள்ளது, அதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்தனர்.

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
குறிப்பாக அந்த வீட்டின் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜின் மூத்த மகன் கோவர்த்தன், அவரது மனைவி ஆகியோர் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டனர், திருமணம் நிச்சியக்கப்பட்டிருந்த நிலையில், கவுதமன் ஏசியில் ஏற்பட்ட கசிவால் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமாரிப்பு
ஏசியை கவனமாக பராமரித்து, பயன்படுத்த வேண்டும் என்று ஏசி நிறுவனங்கள் அவ்வப்போது கூறிக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் ஏசியை பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அவற்றின் பரமாரிப்பு சார்ந்த விளக்கங்களை
பார்ப்போம்.

வழிமுறை-1:
கண்டிப்பாக 3மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் ஏசி-யை சர்வீஸ் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
குளிர்நிலை 18டிகிரி செல்சியஸில் ஏசி-யை முதலில் இயக்க வேண்டும்.

வழிமுறை-3:
ஏசி-யின் குளிர்நிலையை படிப்படியாக குறைக்க வேண்டும்.

வழிமுறை-4:
அறையில் ஒரே நேரத்தில் ஏசி-யையும் மின்விசிறியையும் இயக்கக்கூடாது

வழிமுறை-5:
மின்கசிவால் புகை வந்தால் பதட்டமடையாமல் ஜன்னல்,கதவுகளை திறந்துவிட வேண்டும்.

வழிமுறை-6:
குறிப்பாக ஏசி-யில் ஏதேனும் பிரச்சனை எனத் தோன்றினால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications