கூகுள், அமேசான் பே: 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.!
டிஜிட்டல் இந்தியாவில் நாம் இருக்கின்றோம். இதனால் நாம் பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்தி வருகின்றோம். ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்த வந்த நாம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கூகுள்
டிஜிட்டல் இந்தியாவில் நாம் இருக்கின்றோம். இதனால் நாம் பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்தி வருகின்றோம். ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்த வந்த நாம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட பல்வேறு இ வால்லெட்களை பயன்படுத்தி வருகின்றோம்.

தற்போது இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூகுள் பே, அமேசான், போன் பே போன்ற இ-வாலெட்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பயன்பாடு :
அதிக ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பயன்பாடு இருக்கின்றது. இதனால் பொது மக்கள் சிறிய பெட்டி கடை முதல் டிப்பார்மெண்ட் ஸ்டோர் வரை தற்போது, பணமில்லா பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இதற்காக கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட இவாலெட் ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் எளிதாகவும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

கூகுள், அமேசான் பேயிக்கு கெடு :
இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டிலேயே சர்வர் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது.

வெளிநாட்டு சர்வரிகள் சேமிப்பு:
இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால் அதன் தரவுகளை வெளிநாடுகளின் சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

கூகுள் பே, அமேசான் பேக்கு உத்தரவு:
ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன.
இந்த நிலையில் 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications