18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த இலவச சலுகை! உங்களுக்கு இவர்களை தெரியாமல் இருக்காது!
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வெறும் ஒரு நாள் மட்டுமே நிறைவேறியுள்ள நிலையில், இன்னும் பல இடங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்த வண்ணமாகத் தான் இருக்கின்றனர். இவர்களை வீட்டிலே வைப்பதற்கு அரசாங்கமும், அரசாங்க ஊழியர்களும் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இன்னும் பல டெலிகாம் நிறுவனங்கள் பல புதிய சலுகையையும் வழங்கி வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்
இந்நிலையில் வீட்டில் இருக்கும் மக்களை ஊக்குவிக்க work from home சலுகை, இலவச டேட்டா சலுகை எனப் பல நன்மைகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. இந்த வரிசையில் வீட்டிலிருந்து வேலையும் பார்க்காமல் வெட்டியாக இருக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கிளுகிளுப்பாக ஊக்குவிக்கும் விதத்தில், ஆபாச வலைத்தளமான பார்ன்ஹப் நிறுவனம், தற்பொழுது அதன் பிரீமியம் சேவையை இலவசமாக வழங்கி வருகிறது.

இலவசமாக கிடைக்கும் பிரீமியம் சேவை
வீட்டில் தனியாக நேரம் போகாமல் இருப்பவர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை பார்ன்ஹப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது என்று அறிவித்துள்ளது. தனிமையில் வாழ்வதை இன்னும் சுவாரசியமாக மாற்றுவதற்காக அனைவருக்கும் இந்த பிரீமியம் சேவை இப்பொழுது இலவசமாகக் கிடைக்கிறது. முதற்கட்டமாக இந்த இலவச பிரீமியம் சேவையை பார்ன்ஹப் நிறுவனம் ஒரு மாத காலத்திற்கு மட்டும் அறிமுகம் செய்துள்ளது.

இலவச பிரீமியம் பெறுவது எப்படி?
இந்த இலவச ஒரு மாத கால பிரீமியம் சேவையை அனுபவிக்கப் பயனர்கள் பிரத்தியேக Stay Home Hub என்ற லேண்டிங் பேஜிற்கு சென்று இலவச பிரீமியம் சேவைக்கான கணக்கைப் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். பார்ன்ஹப்பின் துணைத் தலைவர் கோரே பிரைஸ் கூறுகையில் "உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள் வீட்டிற்குள் பூட்டப்பட்டுள்ளனர், இவர்களுக்குச் சுவாரசியமான பொழுதுபோக்கு விஷயங்களை வழங்குவதும் மிக முக்கியமான ஒன்று".

இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அதிகம் விரும்புகின்றனராம்
இதனால் தான், எங்கள் நிறுவனம் இலவச பார்ன்ஹப் பிரீமியம் சலுகையை உலகளவில் விரிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்ததிலிருந்து பலரும் பிரீமியம் கணக்கிற்குப் பதிவு செய்து பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அதிகம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இருக்கும் நிலையில் இது தேவையா? ஆனா உண்மை இதுதான்
சிலருக்கு நாம் இப்போது இருக்கும் நிலையில் இது எல்லாம் அவசியமா என்று தோன்றலாம். ஆனால், பலருக்கும்இது ஒரு முக்கிய தேவையாக இருப்பதே உண்மை. ஆபாச வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் இந்தியா தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருக்கும் மக்களை ஆபாசப் படம் பார்க்க வைப்பது தான் நல்ல விஷயமா என்று பலருக்கும் தோன்றலாம்.

உதவி கரங்களை நீட்டி தொண்டு செய்த நிறுவனம்
ஆனால், முக்கியமான விஷயம் இது இல்லை, பார்ன்ஹப் நிறுவனம் இந்த நேரத்தில் செய்துள்ள தொண்டு காரியத்தைக் கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும். COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக $25,000 டாலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு உதவி மற்றும் முகமூடிகள் என தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறது.

ஆர்வம் காட்டும் மக்கள்
மக்களை வீட்டில் இருக்க ஊக்குவிக்கும் விதத்தில் மட்டுமே பார்ன்ஹப் நிறுவனம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அந்நிறுவனத்தின் சொந்த லாபத்தை எதிர்பார்த்து எந்த காரியத்தையும் செய்யவில்லை என்று தெளிவாக கூறியுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது. இந்த இலவச திட்டத்தை பயன்படுத்த மக்கள் ஆர்வம் கட்டிவருகின்றனர் என்பதும் உண்மையாக இருக்கிறது.

பாராட்டுகளுடன் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்
இவர்களின் செயல் மற்றும் செய்யும் பணியிடம்தவராக இருந்தாலும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாக முன்வந்து உதவும் அந்த நல்ல மனசை மட்டும் பார்த்து, இந்நிறுவனத்தைப் பாராட்டுவதில் தப்பில்லை என்றே கூற வேண்டும். எதுவாக இருப்பினும் அனைவரின் வேண்டுகோளும் ஒன்றாக தான் இருக்கிறது. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள், எங்கும் எதற்காகவும் வெளியில் செல்ல வேண்டாம் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications