13 வயது இந்திய வம்சாவெளி சிறுவன் உருவாக்கியிருக்கும் ப்ரின்டர்
இந்திய வம்சாவெளியை சார்ந்த 13 வயது சிறுவன் ஷுபம் பேனர்ஜி, எட்டாம் வகுப்பு மாணவரான இவர் பார்வையற்றவர்களுக்கான அச்சடிக்கும் இயந்திரம், ப்ரெயில்லி ப்ரின்டரை கண்டறிந்துள்ளார். பார்வையற்றவர்கள் பயன்படுத்த ப்ரெத்யேகமாக விலை குறைவாக இந்த கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார் பேனர்ஜி.

கடந்த ஆண்டு பேனர்ஜீ ப்ரெயில்லீ ப்ரின்டர் ஒன்றை பள்ளி நடைபெற்ற அறிவியல் பொருட்காட்சிக்காக தயாரித்தார். தற்சமயம் கிடைக்கும் அச்சு இயந்திரங்கள் விலை அதிகமாக இருக்கின்றது.

இவர் தயாரித்த அச்சு இயந்திரம் ஒராண்டு கழித்து பல விருதுகளை வென்றதோடு பார்வையற்றவர்கள் தரப்பில் இருந்து நல்ல வரவேற்பையும் பெற்றது. இதையடுத்து தன் தந்தை கொடுத்த பணத்தை கொண்டு ஆய்வு கூடத்தை ஆரம்பித்தார் பேனர்ஜி.

இதையடுத்து இன்டெல் நிறுவனமும் பேனர்ஜி நிறுவனத்திற்கு பெரிய தொகை ஒன்றை அளித்ததோடு சிறிய வயதில் பெரிய தொகை பெற்ற முதல் சிறுவன் என்ற பெருமையையும் பெற்றார் ஷுபம் பேனர்ஜி

இந்த சிறுவனின் கண்டுபிடிப்பு ரலரையும் கவர்ந்திருப்பதோடு பார்வையற்றவர்கள் மத்தியல் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றது என்று தான் கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications








