இனி முகேஷ் அம்பானி ஆசியாவின் பணக்கார மனிதர் இல்லையாம்!
உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகள் கடுமையான தாக்கத்தை உணர்கின்றன. இந்தியாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும், கொரோனா வைரஸ் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பங்கு விலைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உட்பட உலகம் முழுவதும் பலருக்கும் மார்ச் 9 மோசமான நாள். ப்ளூம்பெர்க்கின் அறிக்கையின்படி,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி இனி ஆசியாவின் பணக்காரர் அல்ல. முகேஷ் அம்பானி ஏன் இனி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இல்லை என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே:

#1
ப்ளூம்பெர்க் பில்லியனர்களின் குறியீட்டின்படி, மார்ச் 9 அன்று முகேஷ் அம்பானி தனது நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களை இழந்தார். இருப்பினும், அடுத்த நாள் அவர் 467 மில்லியன் டாலர்களை ஈட்டினார்.

#2
சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜாக் மா, முகேஷ் அம்பானியை முந்தியுள்ளார். இப்போது அவர் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.

#3
முகேஷ் அம்பானியின் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு இப்போது 42.3 பில்லியன் டாலராக உள்ளது

#3
மறுபுறம், சீனாவின் ஜேக் மா-வின், நிகர மதிப்பு 45.7 பில்லியன் டாலர்கள் ஆகும்

#5
முகேஷ் அம்பானியின் சொத்து நிகர மதிப்பு வீழ்ச்சியடைந்த பின்னர், உலகின் 19 வது பணக்காரர் ஆவார்

#6
மார்ச் 9 அன்று ஒரே நாளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 12% குறைந்துவிட்டன. கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பையும் பாதித்துள்ளது

#7
கொரோனா வைரஸ் அலிபாபா குழுமத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், கிளவுட் கம்ப்யூட்டிங் செயலிகளுக்கான தேவை அந்த தாக்கத்தை சமநிலைப்படுத்தி மீட்டெடுத்துள்ளது.

#8
ஜாக் மா தற்போது உலகின் 18 வது பணக்காரர் ஆவார்

#9
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி தனது சொத்தில் 17 பில்லியன் டாலர்களைச் சேர்த்திருந்தார். இதுதான் ஆசியாவிலேயே மிகஅதிகம் ஆகும்.

#10
அதேசமயம் 2019 இல் ஜாக் மா, தனது சொத்தில் 11.3 பில்லியன் டாலர்களை மட்டுமே சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications