2015 ஆம் ஆண்டின் தொழில்நுட்ப போக்குகள் இவை தான், பயன்படுத்த தயாரா
அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி மனித இயல்பாகி விட்டது. அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் மக்களின் வாழ்க்கை முறையை எளிமையாக்குவது மட்டுமே தொழில்நுட்பங்களின் நோக்கமாகவும் இருந்தும் வருகின்றது.

2014 ஆம் ஆண்டில் பல ஊடாடும் செயளிகள், ஆன்லைன் வர்த்தகத்தின் வளர்ச்சி, என அனைத்து சேவைகளும் டிஜிட்டல் முறையகிவிட்டது என்றே கூறும் அளவு வளர்ந்துள்ளது.
[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் தானாக அப்டேட் செய்வதை தடுப்பது எப்படி]
2015 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க இருக்கும் நேரத்தில், வரும் ஆண்டில் வரும் ஆண்டில் எவ்வித தொழில்நுட்பங்கள் மக்களை அதிகம் கவரும் என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்...

மொபைல் பணம்
மொபைல் மூலம் பணம் செலுத்தும் முறை இந்தியாவில் இதுவரை அதிகம் பரீட்சயம் இல்லை என்றாலும், மக்கள் அதிகளவு இன்டெர்நெட் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், குறிப்பாக மொபைல் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவோர் எண்னிக்கையில் இந்தியா அதிவேக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மொபைல் மூலம் பணம் செலுத்தும் முறைகளில் ஆப்பிள் பே, கூகுள் வேளட், பேபால் ஆகியவை முன்னனியில் இருக்கின்றது. மேலும் இந்தியாவில் தற்சமயம் அறிமுகமாகாத ஆப்பிள் பே முறை அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

செயளிகள்
2014 ஆம் ஆண்டில் தேவை அதிகம் இருக்கும் பொருட்களுக்கான செயளிகள் அதிகம் வெளியாகின, அவைகளில் டாக்ஸி சேவைகள், உணவு பொருட்கள், உணவக முன்பதிவுகள் என பட்டியல் நீள்கின்றது அனைவரும் அறிந்ததே.

பீகான்
ப்ளூடூத் சேவைகளை பயன்படுத்தும் பீகான்கள், குறிப்பிட்ட கருவியின் இடத்தை கண்டறிந்து, செயளிகளின் உதவியை கொண்டு வேலைகளை மேற்கொள்ளும்.
வரும் ஆண்டில் பல செயளிகள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பணம் பறிமாற்றம்
சமீபத்தில் வெளியான லைன் பே செயளி வாடிக்கையாளர்களை செயளியில் இருந்து வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்த உதவுகின்றது

வெப் ஆர்டிசி
WebRTC, இலவச ப்ரவுஸர் சார்ந்த தொழில்நுட்பம், இதை கொண்டு வீடியோ மற்றும் ஆடியோ சேவைகளை தடையின்றி அனுபவிக்க முடியும்.

எஃபிமிரியாலிட்டி
இந்த தொழில்நுட்பம் கொண்ட செயளிகளின் வரவு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும், தற்சமயம் ஸ்னாப்சாட் செயளியில் இந்த தெழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பறிமாறி கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும்

ஸ்மார்ட்வாட்ச்
2015 ஆம் ஆண்டில் ஆப்பிள் வாட்ச் வெளியாக இருப்பதை தொடர்ந்து வரும் ஆண்டில் ஸ்மார்ட்வாட்ச் அதிகம் எதிர்பார்க்கப்படும் கருவியாக இருக்கின்றது எனலாம். ஆப்பிள் தவிற பல நிறுவனங்களும் ஸ்மார்ட்வாட்சகளை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

3டி அச்சு
3டி அச்சு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை மூப்பறிமான வடிவில் பொருட்களை அச்சிட உதவும். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த போக்கு அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொலைதொடர்பு
ஸ்மார்ட்வீடு தொழில்நுட்பம் அதிகம் கலந்துரையாடப்பட்ட நிலையில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இதை கையில் எடுத்துள்ளன.
ஆப்பிள் ஹோம்கிட் மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டு கதவுகள், விளக்குகள் மற்றும் பாதுகாப்பு கேமிராக்களை சிரி மூலம் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ளவுட் கம்ப்யூட்டிங்
க்ளவுட் கம்ப்யூட்டிங் மூலம் வாடிக்கையாளர்கள் கணினி சார்ந்த தகவல்களை இணயைத்தில் பாதுகாத்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications