வங்கி கணக்கு துவங்க ஆதாருக்கு குட்பை சொன்ன உச்சநீதிமன்றம்.!
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு செல்போன் இணைப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் என் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இனி வங்கி கணக்குகள் துவங்க ஆதார் அடையாள அட்டை தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் பொது மக்களின் பல்வேறு குழப்பங்களுக்கும் முக்கிய தீர்வுகாணும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. தற்போது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆதார் அடையாள அட்டை உபயோகம்:
வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு செல்போன் இணைப்பு மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் என் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

அமர்வு:
இந்த வழக்குகளை ஒன்றாக இணைந்து விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சானன அமர்வு இன்று( புதன் கிழமை) தீர்ப்பு வழங்கியது.

போலியாக தயாரிக்க முடியாது:
சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு ஆதார் வலுவூட்டுவத அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் அளிக்கின்றது. ஆதார போலியாக தயாரிக்க முடியாது. எனவே இது மற்ற அடையாள அட்டடைகளில் இருந்து மாறுபட்டு இருக்கின்றது.

ஆதார் செல்லுபடியாகும்:
ஆதார் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதால் செல்லுபடியாகும். ஆனால் அதில் சிறு திருத்தங்களை செய்ய வேண்டும். ஆதார் எண்களை தனியார்நிறுவனங்கள், செல்போன்கள் கோர முடியாது.

தேச பாதுகாப்பு:
தேச பாதுகாப்புக்கு மட்டுமே ஆதார பயன்படுத்த வேண்டும். ஆதார் தரவுகளை பாதுக்க உடனடியாக சட்டம் கொண்டு வரவேண்டும்.

புதிய வங்கி கணக்கு தேவையில்லை:
வங்கிகளில் புதிய கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயமில்லை. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் எண் காட்டாயம் இல்லை. யுஜிசி, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம்.

பான் எண்ணுடன் இணைப்பு:
பான் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும். ஆதார் தகவல்களை வெளிநாட்டில் இருந்து திருட வாய்ப்பு இல்லை. ஆதார் இல்லை என்பதற்காக தனிமனித உரிமை பாதிக்கப்பட்ட கூடாது.


Click it and Unblock the Notifications