குவிந்து கிடக்கும் 80டன் தங்க புதையலை 200 வருஷமாக தேடும் ரஷ்யா.!
அப்போது, வழியில் கொள்யைடித்த 80 டன் தங்கத்தை பிரான்சுக்கு தூக்கி செல்ல முடியாமல், வழியில் புதைத்து வைத்துள்ளதாக கூறப்பட்டது. அது எந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டது என்று தெரியவில்லை.
கடந்த 1812ல் ரஷ்யாவில் மாஸ்கோ நகர் மீது நடத்திய படையெடுப்பில் படுதோல்வி அடைந்து, பிறகு அங்கியிருந்து தனது படைகளுடன் பிரான்சு நோக்கி சென்றார் மாவீரன் நொப்போலியன்.

அப்போது, வழியில் கொள்யைடித்த 80 டன் தங்கத்தை பிரான்சுக்கு தூக்கி செல்ல முடியாமல், வழியில் புதைத்து வைத்துள்ளதாக கூறப்பட்டது. அது எந்த இடத்தில் புதைத்து வைக்கப்பட்டது என்று தெரியவில்லை.
ஆனால் இன்று 200 ஆண்டை கடந்தாலும் ரஷ்யா அதை விடாமல் தேடி வருகின்றது. இதை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

200 ஆண்டாக தேடுகின்றது:
ரஷ்யாவில் கடந்த 200 ஆண்டாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலை தேடிக் கொண்டிருக்கின்றார். விகாஸ்லேவ் என்ற வரலாற்று ஆசிரியர், பெலாரஸ் எல்லையோரத்தில் அருகே உள்ள தனது சொந்த நகரமான ருட்னியனுக்கு தங்கள் கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டுமென்று உள்ளூர் பத்திரிக்கைகளிடம் கூறியுள்ளார்.

கிரேட் ஆர்மி தோல்வி:
ஐரோப்பாவின் பல பகுதிகளை தனது கிரேட் ஆர்மியால் வென்றார் நொப்போலியன். ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது நடத்திய தாக்குதலில் படுதோல்வியுற்றார்.
பிறகு பிரான்சுக்கு திரும்பும் போது, 80 டன் தங்கத்தையும், ஏனைய மதிப்புமிக்க பொருட்களையும் திருடியுள்ளார். பிரான்சுக்கு அவற்றை கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. அவற்றை செல்லும் வழியில் புதைத்தாக கூறப்பட்டுள்ளது. இது 200 ஆண்டுக்கும் மேலாக கூறப்படுகின்றது.

சூறையாடப்பட்ட தங்கம்:
நொப்போலியன் படையில் இருந்த பிலிப் டி செகூர் என்பவர் சூறையாடிய மதிப்புமிக்க பொருட்கள் ஸ்மேலென்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள செம்மேவோ என்ற ஏரியில் புதைக்கப்பட்டுள்ள கூறப்பட்டது இதற்கான எந்த தடையமும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

வெடிமருந்து குவியல்:
பிரெஞ்சு ராணுவம் பெரிய அளவில் ஆயுதங்களையும் வெடிமருந்துககைளயும் விட்டு சென்ற இடத்தில், 1830ம் ஆண்டு ரஷ்ய அதிகாரிகளும், தொல்லியாளர்களும் புதையல் வேட்டைகக்காரர்களும் அங்கு புதையல் வேட்டை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏரியில் மறைக்கப்பட்டுள்ளது:
புதையல் எடுக்க விரும்புவோர்களை திசை திரும்புவதற்காகவேன தவறான இடத்தை அந்த அதிகாரிகள் கூறியதாக ஏராளமானோர் கூறி வருகின்றனர். மேலும், புதையல் பத்திரமாக பெலாரஸிலுள்ள பேரெஜினே என்ற ஏரியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவருகின்றனர்.

ரஷ்யா உளவாளிகள் குழப்படும்:
ரஷ்யா உளவாளிகளை குழப்பமடைய செய்ய புதையல் செம்லேவோ ஏரியில் மறைக்கப்பட்டதை போன்ற பிம்பத்தை நெப்போலியன் தனது ஆட்களை அனுப்பி ஏற்படுத்தியுள்ளார் விகாஸ்லேவ் என்பவர் கூறுகிறார்.

ஏரிபாலத்திற்கு கீழ் புதையல்:
தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ருட்னியன் நகருக்கு அருகியுள்ள போல்ஷயா குடாவெச் ஏரிப் பாலத்தின் வழியே கொண்டு செல்லப்பட்டு அதன் மையப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கூறுகின்றார்.

தண்ணீரில் மிந்த வெள்ளித்துகள்:
விலை மதிப்புமிக்க பொருட்கள் புதைக்கப்பட்ட சில ஆண்டுகளில் அந்த பாலம் அரித்துப்போய்விட்டது. 1989ம் அண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஏரியின் தண்ணீரில் வெள்ளித் துகள்கள் அதிகளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது. என விகாஸ்வேல் கூறுகின்றார்.

புதையலை மீட்க முடியும்:
அந்த ஏரிப்படுகையில் சிக்கியுள்ள புதையலை தொழில்நுட்பத்துடன் சிறந்த உபகரணங்களை கொண்டு தேடினால் வெளியில் எடுக்க முடியும் என்று அந்நாட்டு பத்திரிக்கள் தெரிவித்துள்ளன.

முரண்பட்ட கருத்து:
விளாடிமிர் போரியேவாவின் கருத்துக்கள் தற்போது ஏற்பதில் முரண்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நெப்போலியன் விட்டு சென்ற புதையல்கள் குறித்து தவறான கருத்துக்களே இருக்கின்றன.

புதையலை எடுத்துச் செல்லவில்ல:
தனது படையினருடன் புதையலை ரஷ்யாவின் எல்லையை கடந்து செல்லவில்லை என்று வரலாற்று ஆசிரியர் விளாடிமிர் போரியேவாவின் கூறுகின்றார்.


Click it and Unblock the Notifications








