Just In
- 2 hrs ago BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- 3 hrs ago Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- 4 hrs ago யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- 4 hrs ago பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜியோ மயம் கதிகலங்கும் ஏர்டெல்.! ரயில்வேயிலும், டிடிஹெச்சிலும் ஆப்பு.!
தொலைபேசி சந்தையை தொடர்ந்து டிடிஹெச் சேவையிலும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் ஏர்டெல்லுக்கு இதிலும் அடுத்த ஆப்பை வைத்துள்ளது.
இந்திய தொலை பேசி சந்தையில் ஜியோ நிறுவனம் நுழைந்தது. தனது அதிரடியான இலவச திட்டத்தால், குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது.
மேலும், ஜியோ நிறுவனம் ஏராளமான இலவச சலுகைகளை வழங்கியதால், ஏர்செல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டம் அடைந்ததால், தொழிலுக்கு மூடு விழா நடத்தி விட்டன.
ஏராளமான ஆப்பர்கள் இருப்பதால், இரட்டை சிம் கொண்ட போன்களிலும் ஜியோ முதன்மை பெற்றதாக ஆகிவிட்டது. ஏர்டெல் இரண்டாம் நிலை சிம் ஆகி ஆகிவிட்டது.
மேலும், இன்கம்மிங் காலுக்கு பயன்படுத்த துவங்கி விட்டதால், வருமானம் இல்லாமல் ஏர்டெல் நஷ்டத்திற்கு சென்றுவிட்டது. ரயில்வேயில் இருந்த 3.78 லட்சம் வாடிக்கையாளர்களும் தற்போது ஜியோவுக்கு சென்றுவிட்டனர்.
தொலைபேசி சந்தையை தொடர்ந்து டிடிஹெச் சேவையிலும் ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் அறிவித்துள்ளது. இதனால் ஜியோ நிறுவனம் ஏர்டெல்லுக்கு இதிலும் அடுத்த ஆப்பை வைத்துள்ளது.
ஜியோ நிறுவனம்:
இந்திய தொலைபேசி சந்தையில் ஜியோ நிறுவனம் தினமும் 100 எஸ்எம்எஸ், ரோமிங் ப்ரீ, காலர் டியூன், 2 ஜிபி டேட்டா 4 ஜி வோட்டு வழங்குகின்றது. பல்வேறு அதிரடி ஆப்பர்களையும் ஜியோ நிறுவனம் வழங்கி வருவதால், ஏர்செல், ரிலையன்ஸ் நிறுவனங்கள் மூடு விழா கண்டன.
தற்போது, வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் நஷ்டத்தில் சிக்கியுள்ளன.
ஏர்டெல் நிறுவனம்:
ஏர்டெல் நிறுவனம் தொலைபேசியை தொடர்ந்து, டிடிஹெச், ஏர்டெல் பிராட்பேண்ட், இன்டர்நெட், டிடிஹெச், டிவி ஆப், ஏர்டெல் ரவுட்டர், ஏர்டெல் மணி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகின்றது.
ஜியோ சேவை:
தற்போது ஏர்டெல் சேவை வழங்கும் பிரிவுகளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைபேசி, டிடிஹெச் சேவை, டிவி ஆப், ரவுட்டர், ஜியோ மணி உள்ளிட்ட சேவைகளையும் அடுத்து துவங்கியுள்ளது. தொழில் நுணுகத்துடன் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கின்றது.
தொலைபேசி சந்தையில் நஷ்டம்:
ஜியோ நிறுவனம் புகுந்ததால் தொலைபேசி சந்தையில், சில நிறுவனங்கள் தொழிக்கு பூட்டு போட்டு விட்டனர். ஏர்டெல், ஐடியா, போடாபோன், பிஎஸ்என்எல், டோகோமோ உள்ளிட்ட நிறுவனங்களில் சிம்கார்டுகளை இரண்டாம் நிலையாக பயன்படுத்த துவங்கி விட்டனர்.
ஜியோ சிம் கார்ட்டை அவுட் கோயிங்க்கும், இன் கம்மிங் கால்களுக்கு இந்த நிறுவனங்களை பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தொழில் போதிய வருமானம் இன்றி நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
250 மில்லியன் கஷ்டமர்ஸ் நீக்க முடிவு:
முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம், மாதம் குறைந்தது 35 ரூபாய் கூட ரீசார்ஜே செய்யாமல் இருக்கும் 100 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. இதே போல், வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது பங்கிற்கு 150 மில்லியன் சந்தாதாரர்களை நீக்க உள்ளது. நீக்கம் செய்யப்படும் சந்தாதாரர்கள் அனைவரும் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே.
ரயில் டெல்லுக்கு அப்பு:
ரயில்வேயில் கடந்த 6 ஆண்டாக ஏர்டெல் நிறுவனம் சேவை வழங்கி வந்தது. தற்போது, இந்த சேவை வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகின்றது. இதனால் ரயில்வேயில் அனைத்து அழைப்புகளுக்கு ஜியோ இலவசமாக கொடுத்து, 1.95 லட்சம் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.100 கோடி பறிபோனது:
ரயில்வே துறையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருமானம் கிடைத்து வந்தது. தற்போது இது ஜியோவுக்கு செல்கின்றது. இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு இனி கிடைக்கும் ஆண்டு வருமானம் ரூ.100 கோடியும் பறிபோகின்றது. மேலும் ஜியோ நிறுவனம் தனது ரயில்வே அதிகாரிகளுக்கும் பல்வேறு சேவை சலுகைகளையும் அறிவித்துள்ளது.
ரயில்வேயில் மட்டும் 3.78 லட்சம் வாடிக்கையாளர்கள்:
ரயில்வேயில் 1.95 லட்சம் சேவை அளித்தாலும், ஏர்டெல்லை பயன்படுத்தி வந்த ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் சேர்த்து தற்போது, 3.78 லட்சம் ஊழியர்களை தங்கள் பக்கம் சேர்த்துள்ளது ஜியோ.
டிடிஹெச், ஜியோ டிவி ஆப்:
ஜியோ நிறுவனம் தற்போது, டிடிஹெச் மற்றம் ஜியோ டிவி ஆப்களிலம் இனி 621 லைவ் டிவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாப்பி, கன்னடம், குஜராத்தி, மலையாளம், அஸ்சாமி, ஒடியா, போஜ்புரி, உர்து, பெங்காலி, பிரெஞ்ச், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த சேனல்களை ஜியோ நிறுவனம் வழங்கின்றது.
இதில் பல்வேறு வகையில் சேனல்கள் இருக்கின்றன. இனி நாம் லைவ்வாக கூட டிவி ஆப்கிளிலும் பார்க்க முடியும்.
ஏர்டெல்லுக்கு ஆப்:
ஏர்டெல் நிறுவனம் டிவி ஆப் மற்றும் டிடிஹெச் சேவையில் 375 பிளஸ் சேனல்களைத்தான் வழங்கி வருகின்றது. 10 ஆயிரம் பிளஸ் மூவீஸ், டிவி ஷோக்களை வழங்குகின்றது குறிப்பிட தக்கது.
இதில் ஜியோ நிறுவனம் அதிரடியில் இறங்கியுள்ளதால், ஏர்டெல்லுக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எதிலும் ஜியோ மயம்:
ஜியோ நிறுவனம் இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளிலும் தன் சேவையை விரிவடைய செய்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏர்டெல் நிறுவனம் கதிகலங்கி போயியுள்ளது. குறைந்த விலையில் அதிக வாடிக்கையாளர்களையும், லாபத்தையும் அள்ளி வருகின்றது. ஜியோ நிறுவனம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470